வியாழன், 4 மே, 2017

ஆச்சி பயணம் போறா!

ஆச்சி போறாவாம்! அந்தளவில் சந்தோசம்!
பேய்ச்சி பிடாரி பெருங்கரைச்சல்க் கோதாரி!
ஆச்சி போறாவாம்! அந்தளவில் சந்தோசம்!

செத்ததுக்கு சிரிக்கின்ற சின்னவனாய் போயினனோ?
கத்திபிடிச்சாலும் காயப்பட்டு விழுந்தவனை
ஒத்தியெடுத்து உயிர் ஓம்புகின்ற வழிப்பிறந்தும்
செத்ததுக்கு சிரிக்கின்ற சின்னவனாய்ப் போயினனோ?

சத்தியமாய்ச் சொல்கிறன் சாகேல்லை மனிசியின்னும்!
சுற்றி மதில்வைத்த சுகமான வீட்டை விட்டு
ஆச்சி போறாவாம்! அந்தளவில் சந்தோசம்!

ஊருக்கை ஆச்சீன்ரை உபத்திரவம் கொஞ்சமில்லை
பேருக்கு யாரும் பிடிக்கேல்லை எண்டு சொன்னா
தூர்வார்ந்து மனிசி துவைச்செடுக்கும்! குமருகளின்
பேர் கெடுத்துப் போடும்! பேந்தெங்கை கலியாணம்?

கல்லுக்குற்றல் அதின்ரை கைராசி! மனிசி தன்ரை
சொல்லுக்கு  ஆடாட்டா சுழன்றடிக்கும்! அயலுக்கு
நல்லதொண்டு அதனால் நடந்ததில்லை! அதனாலே
ஆச்சி போறாவாம்! அனைவருக்கும் சந்தோசம்!

ஆச்சி கைநாட்டு! ஆனாலும் அடுத்தவைக்கு
ஏ எல் முடிச்சிட்டன் எண்டு சொல்லும்!
ஏ எல் முடிச்சிட்டு ஏன் கம்பஸ் இல்லையெண்டா,
ஊரின் பிரச்சனையை ஒரு சாட்டாய் உலுப்பிவிடும்!

ஆச்சியாலை எல்லாம் அரியண்டம் எண்டாலும்
“ஆச்சி வருமெண்டு ”அச்சுறுத்தி என் பெடிக்கு
சீத்தும் என் மனிசி சிரிக்கும்!  எப்போதும்
ஊத்தையிலை கூட உபயோக மிருக்கெண்டு!

விடுப்பு விண்ணாணம், வேலையில்லாப் பெடியளின்ரை
தொடுப்பு, ஈதெல்லாம் துலக்கித் துப்புத்தர
ஆச்சியை விட்டா ஆரிருக்கார்! ஆரிருக்கார்!

ஆச்சி போகேக்கை அவ வளர்த்த சேவல்களைத்
தூக்கிக் கொண்டு போவாவோ? துலையட்டும்! நாளைக்கு
ஆற்றையன் சேவல் வந்து அதிகாலைத் துயிலெழுப்பும்!
போட்டு வா ஆச்சி! புழுக்கம் தணியட்டும்!

🇨வாயுபுத்திரன்










வெள்ளி, 15 மார்ச், 2013

அரக்கி இருத்தல்!

கோசலை ரீச்சரைத் தெரியாமல் யாரும் அங்கை படிச்சிருக்க முடியாது. அவவின்ரை பெருத்த உருவம் கண்ணுக்கு தெரியாம போகுததெண்டா ஒண்டில் அவன் அந்தப் பள்ளிக்கூடப்பக்கம் போகாம இருந்திருக்க வேணும் அல்லது அவ ரிடையர் ஆன பிறகு படிச்சிருக்கவேணும். அவவின்ரை காலின்ரை பருப்பம் காரணமாக அவ நடக்கிறேல்லை! அரக்கி அரக்கித்தான் வாறவ! பெடியள் எல்லாம் அரக்கி வாறா எண்டு ஓடி ஒளிஞ்சிடுவாங்கள். ஏனெண்டா அவவின்ரை கையிலை சிக்கினானோ அவன் ஒழிஞ்சான்! அப்ப எல்லாம் எனக்கு இராமாயணம் எல்லாம் தெரியாது. நான் அரக்கி அரக்கி நடக்கிற எல்லாரும் அரக்கியள் எண்டு நினைச்சுக்கொண்டு அவையளெல்லாம் அடிக்கிறதுக்கும் வதைக்கிறதுக்கும் எண்டே பிறந்த ஆக்கள் எண்டு பயந்திருக்கிறன்.


கோசலை ரீச்சர் எண்டா அடி போடுற ஆள் எண்டு எல்லாருக்கும் தெரியும். அதிலும் பெடியளுக்குத்தான் கூட அடி விழுகிறது. ஏனெண்டா அவங்கள் தான் அரக்கி வாறா அரக்கி வாறா எண்டு பிலத்துக் கத்திக் கொண்டு ஓடுறது. பொம்பிளைப் பிள்ளையளும் அரக்கி வாறா எண்டு மற்றாக்களுக்கு சிக்னல் போட்டு உசிப்பிப் போட்டுத்தான் போறவளவை ஆனா பெடியள் மாதிரி பிலத்துக் கத்துறேல்லை.

கோசலைச் ரீச்சர் ஏன் அடிப்பா எண்டு எங்களுக்குத் தெரியாது. ஆனா எப்பிடி அடிப்பா எண்டு நல்லாவே தெரியும். அவ அடிபோடக் காரணங்கள் ஒரு பெரிய பட்டியலில் அடங்கும். நேற்று றோட்டிலை போகேக்கை ஏன் சிரிச்சனி எண்ட கேள்வியிலிருந்து இப்ப ஏன் முழுசிறாய் எண்டது வரை பல்வேறுபட்ட கேள்விகள் அவவிடம் இருந்து வரலாம். சரி நேராப் பார்த்தாத்தான் பிரச்சனை எண்டு கீழே தலை குனிந்து நின்றால் பேந்து நிலத்திலை என்னத்தை நோண்டுறாய் எண்ட கேள்வி வரும். அதுக்குப் பயந்து அண்ணாந்து பார்த்தால் ஏன் முகட்டைப் பார்க்கிறாய் எண்டு கேப்பா! எல்லாக் கேள்விக்கும் விளைவு ஒண்டுதான்! எங்கை பின்னுக்கு திரும்பு எண்டு சொல்லியிட்டு மேசையிலை இருக்கிற பிரம்பாலை காற்சட்டையின்ரை பின்புற தூசு பறக்க அடி போடுறதுதான்! மற்ற ரீச்சர்மார் அடிபோடேக்கை கையிலை தான் அடிப்பினம். அப்ப நோவை குறைக்க காற்சட்டையின்ரை பின்பக்கம் தடவுறனாங்கள்! அரைவாசி பொம்பிளைப் பிள்ளையள் படிக்கிற வகுப்பிலை காற்சட்டைக்கு பின்பக்கம் தடவிக் கொள்வது கொஞ்சம் வெக்கமான வேலைதான் எண்டாலும் அப்பிடிச் செய்து நோவைக் குறைக்காட்டா அடுத்த அடி விழேக்கை தாங்க ஏலாது. கோசலைச் ரீச்சர் அந்தக் குறையை விடுறேல்லை. நேரா காற்சட்டைபின்புறம் தான் அவவின்ரை பிரம்பின்ரை இலக்கு! இப்போது நோகுற பின்புறத்தை எங்கடை கை தடவி விடும்.

அதெல்லாம் ஆண்டு 5 க்கு முன்னான கதையள்! நான் ஒரு நாளும் கோசலை ரீச்சரிட்டை அடிவாங்கேல்லை எண்டு நான் கற்பூரம் அணைச்சு சத்தியம் பண்ணினாலும் நீங்கள் நம்ப மாட்டியள். அதுக்காக நான் ஒண்டும் குழப்படி செய்யாத ஆள் எண்டு நீங்கள் பிழையா விளங்கக் கூடாது. தவிர கோசலைச் ரீச்சரிட்டை அடிவாங்க பிழையெல்லாம் விடத் தேவையில்லை! அப்பிடியிருந்தும் நாங்கள் கொஞ்சப்பேர் அடிவாங்காதது பெரிய அதிசயம் தான்!

நாங்கள் படிச்சு கம்பசுக்குப் போய் வந்த பிறகு மேற்படிப்பெண்டுந் தொடங்கியாச்சு! போன மூண்டு தரமும் இப்பிடித்தான் கோசலை ரீச்சரின்ரை கேள்வி மாதிரி கேட்டு எங்களுக்கு அடி விழுந்ததுதான் மிச்சம்!

இந்தமுறை வைவா!

Now tell me, what is the muscle attached to this red line?

அது இடுப்பு எலும்பின்ரை வெளிப்பக்கம்! உட்பக்கமெண்டா எங்கடை ஏரியா! வெளிப்பக்கம் சேர்ஜன் மாரிரை ஏரியா! விடை தெரியேல்லை.

 Now tell me what is the function of the muscle?

மசில்ஸ் என்ன எண்டே தெரியேல்லை பேந்து அதின்ரை தொழிற்பாடு பற்றிக் கேட்டா....

நான் மேலை பார்த்தேன்

“ஏன் மேலை பார்க்கிறீர்?”

நான் மற்றப் பக்கமாக பார்த்தேன்.
“ஏன் அங்காலை பார்க்கிறீர்?”


எனக்கு சிரிப்பு வந்தது.

கோசலை ரீச்சரின்ரை யாரோ சொந்தக்காறன் PGIM க்குள்ளை பூந்திட்டான்.

வெளியே வந்தேன்.

மச்சான் அது கிரசிலிஸ் மசிலாமடா!


கிரசிலிசோ! அந்த இழவை ஏன் எங்களுக்கு கேட்டவங்கள்! அது லோவர் லிம்ப் மசில்ஸ் எல்லோடா!

மச்சான் உனக்குத் தெரியுமே அதுக்குத்தான் கனக்க மார்க்ஸ் குடுத்திருந்தவங்கள். 10 க்கு 6 அந்தக் கேள்விக்குத்தான்.

ரிசல்ட்ஸ் அவுட்டானது. முந்தி நாங்கள் கோசலை ரீச்சரிட்ட தப்பினமாதிரி இந்த எக்சாமிலும் சிலபேர் பாஸ் பண்ணியிருந்தாங்கள்!!!!!

14..03.2013



வெள்ளி, 15 ஜூன், 2012

ஏ டபிள்யு டபிள்யு டபிள்யு த? மே டபிள்யு டபிள்யு டபிள்யு த?

கிளைமாக்ஸ் காட்சி ரிவியிலை போகும்போது கரண்ட் நிண்டா வருமே ஒரு விசர் அதுமாதிரித்தான் நெற் பார்க்கேக்கை நெற் அவுட்டானால் வரும் விசரும்! வீட்டை நெற் இருக்கு எண்ட தைரியத்திலை ஒன்லைன் சேவிஸ் ஒன்லைன் பாங்கிங் எல்லாத்துக்கும் பதிஞ்சு போட்டு அரைகுறை கனெக்சனிலை நீங்களும் அல்லாடியிருப்பியள்! வெளிநாட்டிலை இருந்து வந்தவன் சொன்னான் “மச்சான் 18 mbs ஸ்பீட் இன்ரனெட்டை அடிப்படைத் தேவையளுக்கை ஒண்டாக்கப்போறாங்கள் எண்டு! நான் சின்ன வகுப்பு படிக்கேக்கை உணவு உடை உறையுள் இது மூண்டுந்தான் அடிப்படைத்தேவை! இப்ப வரவர இவங்கள் எல்லாத்தையும் கூட்டிப்போட்டாங்கள்!

2000 ஆம் ஆண்டு ராமின்ரை வீட்டைதான் முதன் முதலிலை கண்டனான். மொடம் போட்டு டெலிபோன் லைனிலை கொழுவி அது கீச் டுர் எண்டு சத்தம்போட்டு கனெக்சன் கொழுவி! நாங்கள் இன்ரநெற் கனெக்சனிலை இருக்கேக்கை வேறையாரும் டெலிபோனை தூக்கக் கூடாது! தூக்கினால் கட்!

அப்ப ஜி மெயில் எல்லாம் இல்லை! ஜி மெயிலே இல்லை எண்ணுறன் பேந்து யு ரியுப் எண்ணுறியள்!!! எனக்கு விசர் வரப்போகுது!

ஒரு மெயில் திறந்து பார்க்கவே 5 நிமிசத்துக்கு மேலையாயிடும்! பீக் அவரிலை எண்டா பேந்து டெலிபோன் காசும் இன்ர நெற் காசும் சேர்ந்து.... அப்பாடி இன்ரநெற் வைச்சிருக்க பணக்காறராலைதான் ஏலும்!

பேந்து ஏடிஎஸ்எல் எண்டாங்கள்! அதுக்கும் டெலிபோன் வேணுமே! கொழும்பிலை குச்சுக்கை அட்ரசே இல்லாத எங்களுக்கு ஆர் கனெக்சன் தாறது!!!!!!

பேந்து ஒருமாதிரி சிம் போட்டு டொங்கிளிலை பார்க்கிற காலம் வந்தது! வலு ஸ்பீட் எண்டாலும் காசு தண்ணியா கரைஞ்சு போடும்! அதைவிட யாழ்ப்பாணத்திலை ஜி எஸ் எம் சிக்னலே இல்லாமை எங்கடை வீட்டை மிஸ்ட் கோல் அலேட் அனுப்பிற எங்கடை வீட்டை மொபைல் புரோட்பாண்ட் வேலைசெய்யும் எண்டு நினைக்கிறது பைத்தியக்காரத்தனம்! ஆனா சிக்னல் இருந்தா அதைப்போலை நல்ல சாமான் வேறை ஒண்டுமில்லை!

இப்பிடி இருக்கேக்கைதான் அந்த விளம்பரம் போனது! வெள்ளைச் சட்டை போட்ட பெடியள் சேந்து WWW எழுத்தை எழுத பாடுபடுற மாதிரி! மழைக்கும் வெயிலுக்கும் நில வெடிப்புக்கையும் அவையள் படூற பாடு! ருவென்ரி ருவென்ரி மட்சுக்கு இடையிலை அலுப்படிக்கிறமாதிரி உந்த அட்வடிஸ்மெண்ட் வந்தாலும் அதையும் பார்க்கிறதுதான்! இவ்வளவு பிள்ளையள் சேர்ந்து செய்ததுக்கு ஒரு மதிப்பு குடுக்கோணும் பாருங்கோ!

நானும் புரோட்பாண்ட் அப்பிளை பண்ணினன். சும்மா சொல்லக் கூடாது ஸ்பீட் ஸ்பீட்தான்! ஆனா டொங்கிளை மாதிரி கரண்ட் கட்டான நேரங்களிலை வேலை செய்யாது. ரவுட்டருக்கு கரண்ட் வேணுந்தானே! யாழ்ப்பாணத்திலை எங்கடை பகுதியளிலை ஒண்டவிட்ட ஒருநாளைக்கு கரண்ட் கட்!

ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் எண்டு சொல்லுவினம்! ஆனா இன்ரநெற்றிலை ஆசையும் மோகமும் யாருக்கும் குறையாது பாருங்கோ!

முப்பது நாளுக்குள்ளையே தொடங்கியிட்டுது பிரச்சனை! கரண்ட் கட்டாகி வந்தா பிறகு லைன் வேலை செய்யாது! ஹொட் லைனுக்கு அடிச்சா அங்கையிருந்துகொண்டு அவை எந்தெந்த பலுப்பு டவுட்டரிலை பத்துது எண்டு   கேட்டிட்டு டவுட்டரை restart பண்ணுங்கோ எண்ணுவினை! பத்துதோ எண்டு கேப்பினை! பத்திக்கொண்டுவரும் .. எனக்குத்தான்!

போன மூண்டு கிழமையா ஒரே பிரச்சனை! கரண்ட் கட் பண்ணி வாற பிரச்சனை சரியாகி இப்ப வேறை பிரச்சனை! மழை புயல் ஒண்டும் இல்லாமலே கனெக்சன் கட்டாகி போகும்! கட்டென்றால் ஒரு பத்து நிமிசத்துக்கை நாலைஞ்சு தரம் ! Refresh refresh பண்ணியே F5 பட்டன் தேஞ்சு போச்சு!

ஹொட் லைனுக்கு அடிச்சா இந்தா பார்க்கிறம் அந்தா பார்க்கிறம் எண்டு சொல்லி சொல்லி கடைசியிலை ஒருநாளும் வந்து பார்த்திட்டு “ஓம் அப்ப உண்மையாவே பிரச்சனை இருக்குத்தான்!” எண்டு கண்டு பிடிச்சினம்! ஆனா என்ன பிரச்சனை எண்டு தெரியேல்லையாம்!

எப்பிடியும் சரி படுத்திவிடுவம் எண்டு போனவைதான்! பேந்து வரவும் இல்லை! கனெக்சன் சரியாகவும் இல்லை!

உந்த புரோட் பாண்டிலை ஜி மெயிலை படிக்கவே 10 நிமிசம் எடுக்குது! அதுக்குள்ளை பத்துத் தரம் கனெக்சனும் கட்டாகுது! ( நான் டயல் அப் கனக்சனிலையே இருந்து 5 நிமிசத்திலை மெயில் பார்த்திடுவன்)

அம்மணமா இருக்கிறவன் ஆடையை அணியோணும்! அதுக்குப் பிறகுதான் அருகிலிருக்கிறவன் காற்சட்டை சிப் கழண்டு கிடக்கு எண்டு நக்கல் அடிக்கோணும்! விளம்பரம் தயாரித்த அந்தப் புண்ணியவானுக்கு இது சமர்ப்பணம்!

ஏ WWW த? மே WWW த? எர்ரா கல்லை! ரிவிப் பெட்டியை உடைப்பம்!





திங்கள், 1 ஆகஸ்ட், 2011

ஆமிக்காரன் எண்டு சொன்ன உடனை முந்தி எங்கடை சனம் ஓடுறமாதிரி அந்த மினி வான் வரேக்கையே விளங்கியிட்டுது பின்னாலை ஒரு சீ ரி பி வரூது எண்டு! யாழ்ப்பாணத்திலைதான் இந்தளவுக்கு போட்டி போலை கிடக்கு! யாழ்ப்பாண மினிவான் எல்லாம் உந்த ரோஸா வான்தான். எங்கடை ஒடுங்கின ரோட்டுகளுக்குள்ளை பேயோட்டம் ஓட அந்த பஸ்கள்தான் சரி! ஆனாப் பாருங்கோ அதுக்குள்ளை எஸ் வடிவத்திலை எல் வடிவத்திலை எல்லாம் நிற்க உங்களுக்குத் தெரியோணும். முந்தின உடம்பெண்டா வளைஞ்சு கொடுக்கும் ஆனா அப்ப முத்தின உடம்பு! சளிஞ்சுதான் கொடுக்கும்.


காலை அல்லது உடம்பின்ரை ஏதாவது ஒரு பகுதியை வானுக்கை வைத்துக்கொண்டு மிச்சத்தை நீங்கள் எங்கை வைச்சிருந்தாலும் கொண்டக்ரருக்கு சந்தோசம்தான். அம்மா அங்கை இடமிருக்கு ஆச்சிக்கு சீட்டைக் குடுங்கோ எண்டெல்லாம் பேய்க்காட்டிச் சனத்தை ஏற்றிக்கொண்டு வரேக்கை புட்போட் நிலத்திலை தோய நிவைமாதப் பிள்ளைத்தாய்ச்சி போலத்தான் வான் இருக்கும்!

வானுக்கை ஏறமுன்னம் கையிலை காசை எடுத்துப்போடவேணும் பாருங்கோ! இல்லாட்டா பின்பொக்கற்றிலை பேசை எடுக்கப்போய் தன்ரை இடுப்பிலை கிள்ளிப்போட்டார் எண்டு பொம்பிளைப்பிள்ளையளிட்டை குறை கேட்க வரும். சிலவேளையிலை கையை காலை அசக்கெலா இறுக்கத்திலை நிற்கேக்கையும் கொண்டக்கரர் விலாங்கு மீனைப்பொல வழுக்கிக்கொண்டு வந்து எல்லாரும் ரிக்கட் எடுத்தாச்சோ எண்டு கேட்கேக்கை கனகாலமாய் பேச மறந்திருந்த செந்தமிழ்தான் வாயில வரும் பாருங்கோ!

அதுசரி ரிக்கெட் எடுக்கிறதெண்டா அதுக்கு அர்த்தம் காசைக் குடுக்குறததான். அங்கை ரிக்கெட் ஒண்டுந் தாறேல்லை! ஆனாப்பாருங்கோ ஒரு அண்டர்ஸ்டாண்டிங்தான்! திருப்பி மிச்சங்கேட்கேக்கைதான் இருக்கு விளையாட்டு!






சீரிபி பாருங்கோ ஓடு மீன் ஓட உறு மீன் வருமளவும் வாடியிருக்குங் கொக்கு! தன்னை முந்திக் கொண்டு போற எல்லா மினிவானையும் விட்டிட்டு ஆறதலா வரும். அதிலை ஏறினா மற்றவையிலை முட்டாம காசு எடுத்துக் கொடுக்கலாம். தவிர என்னைமாதிரி உயரமான பெடியள் வளையாம நெளியாம நிமிர்ந்து நிற்கலாம்!

ஆனாப் பாருங்கோ கலியாணத்துக்கு பொம்பிளை தேடுற மாதிரி சிரிபியை பிடிக்கிறதும் வலுங் கஸ்டம்! பெற்றாவிலை பஸ் வாறமாதிரி ஒண்டுக்குப் பின்னாலை ஒண்டு வருமெண்டா நான் ஏன் பாருங்கோ மோட்டபைக்கிலை ஏறப்போறன்???!!

( படங்கள் இணையத்தில் சுட்டவை)
01.08.2011



ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

அழவைச்சுப் பார்த்தேன், அழகு!

பின்னலிட்டால் அழகு பேச்சினிலே ஓரழகு
கன்னந்தொட்டு போகும் கார்குழலில் ஓரழகு
என்ன என்று தேடி ஏமாறும் முகம் அழகு
சின்னவளைப் போல சிரிப்பாள், சிலையழகு!

வன்ன இடை அழகு வளைவழகு நெளிவழகு
கன்னி அவள் கதையோ கள்ளமில்லா ஓரழகு
தின்னச் சொல்லும் சிலதிருக்கு அது அழகு!
பெண்ணவளின் கனிவாய் பேரழகு பேரழகு!

வேலை மிகவுண்டு விளைவாலே வரமாட்டன்
நாளை சந்திப்போம், நான் சொன்னேன் - சாலமிட்டு
கண்ணீர் வரவழைத்து கசக்கினாள் விழிரண்டும்
அன்னே, அதுவும் அழகே!!!!

14.08 2010

புதன், 26 மே, 2010

வீதியோட்டம்.

உவர் குண்டனுக்கு உதெல்லாம் ஏலாது எண்ட கதைதான் என்னையும் உசுப்பேற்றி விட்டது. பின்னை என்ன! எந்த நேரம் பார்த்தாலும் உவையளுக்கு ஒரு நக்கல்!

சபாபதியர் என்ன பாவம் செய்தாரோ தெரியாது. அவர் பாவம் செத்துப் போனார். அவருக்கு எங்கடை முகமோ அல்லது எங்களுக்கு அவரின்ரா முகமோ தெரியாது. முகந்தெரிஞசுதான் நன்மை தீமை செய்ய வேணுமே என்ன! பாவம் எங்கடை முழு வகுப்பிலுமே சபாபதி ஹவுசுக்கு தெரிபட்ட ஆக்களை நீங்கள் பாத்தியள் எண்டா எப்பவோ செத்துப்போன அவருக்காக கண்ணீர் விட்டிருப்பியள். அல்லது அவர் உயிரோடை இருந்திருந்தா அவர் செத்துப்போயிருப்பார்!!!!

நான் ஸ்கந்து பூஸ்டர் எண்டுவடிகட்டி எடுத்த பிள்ளையளை வைச்சு கொண்டு ( எங்கடை பள்ளிக்கூடமே வடிகட்டித்தான்பிள்ளையளை எடுக்கிறது. ஆனா வடியிலைமிஞ்சி இருக்கிற சக்கையளா நாங்கள் இருந்ததுக்கு நான் என்ன செய்யுறதுஃ??!!!) எபபிடி இவண்டுகள் நடத்துறது எண்டு எங்கடை ஞானக்குட்டான் ஞானதேசிகன் சேர் முடியை பிய்ச்சு கொண்டதிலை மிச்ச சொச்சமாய் இருந்த அவரின்ர மயிரும் காணாமப் போட்டுது!

குணடனாய் இருந்தா குண்டெறியலாம் எண்டு யாரோ தப்பாச் சொல்லியிட்டாங்கள். குண்டெறியிறவனெல்லாம் குண்டனாய் இருக்கலாம் ஆனா குண்டன்கள் எல்லாரும் குண்டெறிய முடியாது எண்டு என்னைப் பார்தபிறகுதான் அவையளுக்கு விளங்கியிருக்கும். நானும் எதிர்பார்க்கேல்லை அது அப்பிடி நடக்கும் எண்டு! எறிஞ்ச குண்டு காத்திலை சுழலும் எண்டு நான் கனவிலும் நினைக்கேல்லை! பின்னை அது என்னெண்டு முன்னாலை எறிய, போய்ப் பின்னாலை விழுந்தது எண்டும் எனக்குத் தெரியாது! நல்லவேளை பின்னாலை நிண்ட பெடியள் தப்பியிட்டாங்கள். ஆர்ரையும் காலிலை விழுந்திருந்தா..... முரளியின்ர டூஸ்ரா பந்து நான் உறிஞ்ச பட்சொட்டிலை இருந்துதான்அந்தாள் படிச்சதெண்டா நீங்கள் என்ன நம்பவாபோறியள்!

குண்டெறியிற ஆக்கள் ஜவலினும் எறியோணுமாம். என்னையும் எடுத்துப்போட்டாங்கள்! கிளீனர் காண்டி பயந்து கொஞ்ச நேரம் அந்த இடத்திற்கே வரேல்லை! ஜவலினிலை அவன்தான் கடைசியிலை சம்பியன்! ஆனா அவனுக்கு பீப்பயம்! வராதா பின்னை! நான் எறியிறது எங்கை போகுமம் எண்டு எனக்கே தெரியாத போது அவனுக்கும் அது எப்பிடித் தெரியும். பின்னாலை முன்னாலை நிக்கேக்கை வந்து ஏறியிட்டுது எண்டா??!! கடைசியிலை நான் எறிஞ்ச ஒண்டும் லாண்ட் பண்ணவே இல்லை!!!!

பெரிய அவமானம். சபாபதி இல்லம் கடைசி! ஒரு வருசம் இரண்டு வருசம் இல்லை தொடர்ந்து 3 தரம்!


வெறி வந்திட்டுது! ஹவுசுக்கு குறைஞ்சது ஒரு புள்ளியாவது பெற்றுக் குடுக்கிறதெண்டு! என்ன செய்யலாம்???!!!

றோட் ரேஸ்தான் நல்ல வழி! குறிச்ச நேரத்திலை ஓடிமுடிச்சா ஒரு புள்ளி கிடைக்கும். ஆனா அதுவும் லேசுப்பட்ட விசயம் இல்லை! 5 கிலோமீட்டரை 20 நிமிசத்திலை ஓடவேணும்.

கனக்க தூரம் ஓடுறது எண்டது எங்களுக்கு ஒரு பிரச்சனை இல்லை! எத்தினை நாள்எத்தினை மைல் நாங்கள் சைக்கிளை மூசி மூசி உழக்கியிருப்பம். தூரமெண்டது பெரிய பிரச்சனையே இல்லை. ஆனா டைமுக்கை முடிக்கிறதெண்டா கொஞ்சம் கஸ்டந்தான்.

நான் றோட்றேசுக்கு பெயர் கொடுக்கேக்கை வகுப்பிலை பெரிய சிரிப்பலை! நாலெட்டு நடந்தாலே மூச்சு வாங்கிற பெடியன் றோட் ரேசிலை ஓடுறதெண்டா. ....
இன்னொரு அம்புலன்சுக்கும் சொல்லி வையுங்கோடா.... பெடியள் நக்கலுக்கு சொன்னவங்களோ அல்லது கரிசனையிலை சொன்னவங்களோ எனக்குத் தெரியாது.

நான் ஓடுறதெண்டு தீர்மானம் எடுத்திட்டன்.

தனிய ஒரு நாளும் ஓடேலாது. ஓடுறதெண்டா சோடி தேவை. பஞ்சிப் படேக்கை ஊக்குவிக்கவும் பயிற்சி எடுக்கவும் யாராவது தேவை!


மஞ்ஞாதான் உதுக்கு சரியான ஆள்! மயுரன் எண்ட பெயர் மஞ்ஞா எண்டு மாத்தினது யாரெண்டு தெரியாது! ஆனா மஞ்ஞா எல்லாத்துக்கும் ஓமெண்டு வாற ஆள் எண்டு எல்லாருக்கும் தெரியும்.

மஞ்ஞா அஞ்சு மணிக்கே வந்து வாசலிலை பெல் அடிக்கும். மஞ்ஞாவும் என்னைப்போலத்தான். அஞ்சு மணிக் கருக்கலிலை முகந்தெரியாது. ஆனா அவன் சிரிப்பான். மஞ்ஞான்ரை பல்லு என்ரையை மாதிரி காவிபடிஞ்ச பல்லுகள் இல்லை. இருட்டிலை சிரிச்சாலும் தெரியும்.

அவன் பெல் அடிக்கேக்கை தான் நான் எழும்புறது. வாயை மட்டும் அலம்பிப்போட்டு காற்சட்டை ரீசேட் போட்டுக் கொண்டு போறதுதான். அந்த காலத்திலை ரக் சூட் எண்டாலோ பம் சூ எண்டாலோ எங்களுக்கு தெரியாது.

எங்கடை கிரவுண்டிலை இருந்துதான் ஓடத் தொடங்குறது. காலைமை ஓடுறதும் ஒரு விறுவிறுப்புதான் பாருங்கோ! காலமை எண்டா ஓடேக்கை மம்மல் இருட்டிலும் நல்லா கண் தெியோணும் பாருங்கோ! கிடங்கு முடங்குகளிலை விழுந்தெழும்பாம மட்டுமில்லை காலங்காத்தாலை தெருவுக்கு கோலமிட்டு வைச்சிருக்கிற எங்கடை வைரவரின்ரை வாகனத்தின்ரை வாய்ப்பனிலை உழக்காம ஓடவுந்தான்!

கிரவுண்டிலை தொடங்கி அப்பிடியே கஸ்தூரியார் றோட்டை பிடிச்சு நாலவர் நோட்டாலை திரும்பி அப்பிடியே பிறவுண் ரோட் பிடிச்சு பேந்து கலட்டிச் சநிதியிலை இருந்து இராமநாதன் றோட்டாலை நாச்சிமார் கோயில் வந்து..பேந்து அப்பிடியே அரசடிபோய் சிவப்பிரகாசம் றோட்டை பிடிச்சு மானிப்பாய் றோட்டு வந்து ஓட்டு மடத்தாலை பழையபடி கிறவுண்டுக்கு வந்து ஒரு ரவுண்ட் அடிச்சிட்டு நிற்கோணும். இதுதான் முழு ரூட்டும்.

முதல் நாள் ஓட்டம் பாருங்கோ. பிறவுண் றோட்டிலேயே களைச்சிட்டுது. அப்பிடியே அரசடி றோட்டாலை திரும்பி வந்ததுதான். அடுத்தநாள் நாச்சிமார் கோயிலடி! மூண்டு நாளுக்கு பிறகுதான் முழு றவுண்டுமே ஒரே ஓட்டத்திலை ஓட முடிஞசுது. எவ்வளவு நேரத்திலை எண்டே கேக்கிறியள். சொன்னா வெக்கக்கேடு! ஒண்டரை மணித்தியாலம் பிடிச்சுது. உந்த தூரத்தை 20 நிமிசத்திலை ஓடுறதெண்டது கொஞ்சம் கஷ்டமான காரியம் போல தெரிந்தாலும் நாங்கள் முயற்சியை கைவிடவில்லை.

முதல் இரண்டுநாளும் பிரச்சனை அவ்வளவு இல்லை. மூண்டாம் நாள் தான் அது தொடங்கினது. அண்டைக்கு எண்டு பார்த்து மஞ்ஞாவும் சுணங்கிப்போனான். நாங்கள் சிவப்பிரகாசம் வீதியை தொடேக்கை விடிஞ்சிட்டுது.

எங்கடை பெட்டையள் காலங்காத்தாலை எழும்பி வாசலிலை விளக்குமாத்து போட்டு கூட்டுமளவு முன்னேறியிருக்கும் எண்டு நான் கனவிலும் நினைக்கேல்லை. அதுகள் கேற்றை திறந்து கொண்டு வர அதுக்குப் பின்னாலை அவையளின்ரை வீட்டுநாயளும் வெளியிலை வந்திடும்.

பேந்தென்ன கலைபாடுதான். அதுகள் உஞ்சு உஞ்சு எண்டு கூப்பிட்டாலும் அவையளின்ரை நாயள் எங்கடை குஞ்சுகளை புடுங்காம விடுறதில்லை எண்டு கலைச்ச கலையல்!!! அப்பப்பா! எங்களை ஒரு கோச்சும் அப்பிடி ரெயின் பண்ணி இருக்கேலாது.

ஒரு மாதிரி அந்த நாளும் வந்திட்டுது. டே மச்சான் களைச்சுதெண்டா வா வந்து அம்புலன்சிலை ஏறு எண்டு உவன் பேக்கரன் கூட வெறுப்பேத்தினான்.

வெறி வந்திட்டுது.

நாயளின்ரை ரெயினிங்.. பெட்டையளின்ரை சிரிப்பு... அவனின்ரை நக்கல்...

ஓட்டம் சொல்லி வேலையில்லை.

பெல் அடிக்க முந்தி வந்து சேந்திட்டம்.

சபாபதி ஹவுசுக்கு என்னாலை ஒரு புள்ளி.

அந்த முறை சபாபதி ஹவுஸ் கடைசியிலிருந்து கடைசிக்கு முன்னதாக முன்னேறியிருந்தது.










செவ்வாய், 4 மே, 2010

வாறியளே உதிலை ஒருக்காப் போட்டு வருவம்??!!!

என்ரை காதல் தோத்ததுக்கு உந்த குறுக்காலை போனவங்களும் ஒரு காரணம் எண்டா நீங்கள் நம்ப மாட்டியள். குறுக்காலை போவார் எண்டு யாரைச் சொல்லுறது எண்ட குழப்பம் உங்களுக்கு வேணுமானால் இருக்கலாம். எனக்கு இல்லை. உந்த கொன்வே எண்ட சாமானைப் போட்டு எங்கடை யாழ்ப்பாணத்திலை இருக்கிற பாதையளை கால நேர கணக்கில்லாம மூடி வைச்சிருந்த புண்ணிவான்களைத்தான் சொல்லுறன். கொன்வே எண்ட உடனை வவுனியாவுக்கு போன பஸ் கொன்வே உங்களுக்கு நினைவு வரலாம். இது அதில்லை பாருங்கோ. அதுக்கு முன்னம் அவங்கள் தங்கடை வாகனம் போறதுக்கு வைச்சிருந்தது.

எனக்கும் கொன்வே எண்டா என்னெண்டு ஒரு இழவும் தெரியாது. அம்மா சொன்னவதான் உவங்கள் பாதையை மூடி விளையாடுவாங்கள் கவனம் எண்டு. உவங்கள் தான் முகமாலை பாதையை மூடிப் போட்டாங்களே! நானே பிளைட்டிலைதானே வந்தனான். பேந்தென்ன பாதை மூடுற விசர்க கதையை மனிசி கதைக்குது எண்டு கோபந்தான் வந்தது.

உன்னாணை விசயம் உண்மைதான் பாருங்கோ! எனக்குத்தான் விசயம் விளங்கேல்லை. நானும் கன காலம் யாழ்ப்பாணப் பக்கம் புழக்கத்திலை இருக்கேல்லைத் தானே! எங்கடை காலத்திலை எண்டா முந்தி ரவுண்டப்பு தலையாட்டி எண்டு சில்லறை விசயங்கள் தான் இருந்தது.

ரவுண்டப் எண்டா எங்களுக்கு சந்தோசம்தான். போவ ஏலா எண்டு கொச்சையிலை கதைக்கிற அவனுக்கு உச்சிப்போட்டு நாள்கள் ரியுசனுக்கு போடுவம் பாருங்கோ! அவன் ஜொப் ஐடியா (JOB ID) எண்டு கேட்டா ஆட்டுறதுதானே தலையை. அப்பிடி அவன் வாங்கிப் பார்த்தாலும் அவனுக்கு இங்கிலிஸ் வாசிக்க தெரியாது எண்டு எங்களுக்கு தெரியும். பேந்தென்ன அவன் ஹரி யன்ன யன்ன எண்டா நாங்க் பண்டை (BUND) கடந்து போறதுதான்.

தற்செயலா பிடிபட்டு ரவுண்டப்புக்குள்ள மாட்டுப்பட்டாலும் அது எங்களுக்கு பெரிய விசயம் இல்லை. யாராவது வாற தலையாட்டி மாறிக்கீறி ஆட்டிப்போட்டா அவங்கள் கொண்டுபோய் போடுற போடிலை குந்தியிருந்து குசு விட்டாக்கூட நோகும் எண்டு சொல்லுறவைதான். ஆனா எங்கைளைப் பார்த்து தலையை ஆட்டினா தலையாட்டிக்குத்தான் விசர் எண்டு அவங்களே சொல்லுவாங்கள். முயல் பிடிக்கிற நாயெண்டா மூஞ்சியிலை பார்க்கவே தெரியும் பாருங்கோ!




ரவுண்டப் எண்டா அவங்கள் காலமையே தொடங்கியிடுவாங்கள். போட்ட உடுப்போடை மாடு சாய்ச்ச மாதிரி எல்லாரையும் கோயிலடிக்கு கொண்டு வந்து போடுவாங்கள். ஞாயிற்றுக் கிழமைதான் ரவுண்டப் வழமையா நடக்கிறது. உப்பிடித்தான் நைட்டியோடை வந்த நிர்மலா அக்காவை பக்கத்து வீட்டு பரமேஸ்வரன் அண்ணை பார்த்து.. அதுவே லவ்வாகி.. ஊரைவிட்டு ஓடுறளவு வந்ததெண்டா ரவுண்டப்பின்ரை பவர் உங்களுக்கு விளங்கியிருக்கும். மூஞ்சை கழுவாம பொம்புளையளைப் பார்த்தா பேயை பார்த்த மாதிரி இருக்கும் எண்டு சொல்லுறவை ஆனா பாருங்கோ நிர்மலா அக்காவை முகம் கழுவாம பார்த்தாக் கூட கிளிப்பிள்ளை மாதிரி நல்ல வடிவு. ஆனா பாவம் நிர்மலா அக்காவின்ரை தம்பிக்கு அக்காவின்ரை வடிவுமில்லை துணிவும் இல்லை. அவனுக்கு இப்ப கூட பிடிச்சு ஒழுங்கா ஒண்டுக்கடிக்கத் தெரியாதெண்டு வினாசித்தம்பி வாத்தியார் சொல்லுறவர். அது உண்மையா இருக்கலாம். ஏனெண்டா அண்டைக்கு தலையாட்டி மாறி பிழையா தலையாட்டி அவனுக்கு கொண்டுபோய்ப் போட்ட பூசையிலை மூத்திரத்தோடை இரத்தம் வந்ததாய் அப்ப கதைச்சவையள்தான்.

ஆனா எங்களுக்கு உந்த கொன்வே தெரியாது பாருங்கோ! அண்டைக்கும் அப்பிடித்தான் தின்னவேலிச் சந்திக்கு இங்காலை ஒரு அலுவலாய் வந்தனான். தாலியை கட்டுவார் கொன்வேயை போட்டுட்டாங்கள். றோட்டுக்கு அங்காலையும் போகவிடானாம். இஞ்சாலையும் வர விடானாம். ஆனா றோட்டாலை ஒரு வாகனமும் போகவும் இல்லை. எப்ப எடா கொன்வேயை திறப்பான் எண்டு கேட்டா அதுவும் தெரியாதாம். எப்ப போடுவான் எண்டதும் தெரியாதாம். மூண்டு மணித்தியாலம் ஆச்சுப் பாருங்கோ சந்தியை கடந்து போக!!!

காதலுக்கும் ஆறாம் நம்பருக்கும் என்ன தொடர்பெண்டு எனக்குத் தெரியாது. சாத்திரத்தை நான் நம்புறதும் இல்லை. ஆனா நீங்கள் ஆறாம் நம்பரோ எண்டு கேட்டு உதுகள் ஒருமாதிரிச் சிரிக்க மனசுக்குள்ளை குறுகுறு எண்டு அரிக்கிறதுதான்.

ஆனாப் பாருங்கோ காதலிக்கிறதுக்கு என்ன வேணும் எண்டு கேட்டா ஒரு பெண் மட்டும் போதும் எண்டுதான் நான் சொல்லுறனான். ஆனா என்னைக் கண்டா என்ரை பெடியளுக்கு பயம். இருக்காதே பின்னை. யாரையாவது பார்த்துவிட்டு உது யாரடா எண்டாலே பயம் பிடிச்சிடும். உவங்களைப்போலை அந்தப் பிள்ளைக்கு அண்ணன் தம்பி இருக்கோ? அவன் அடிதடிக் காரரோ ? எண்டெல்லாம் விசாரிக்குகொண்டுதான் இறங்க வேணும் எண்டா பேசாம பேசியே கலியாணத்தை செய்யலாமே? பேந்தென்ன அதிலை திறில் வேண்டிக்கிடக்கு!!!!





அண்டைக்கு ஜீவன்தான் மாட்டுப் பட்டது. வாவன் ஜீவன் உதிலை ஒருக்காப் போட்டு வருவம் எண்டு சொல்லேக்கை ஜிவனுக்கு விசயம் தெரியாது. விசயத்தை முதலே சொல்ல எனக்கென்ன விசரே? ஜீவனின்ரை மோட்டசைக்கிள் வல்லை காற்றை கிழிச்சுக் கொண்டு ஓடும். விசயத்தை முதலிலேயே சொன்னா ஆள் வறுகியிடும். போகவிட்டுச் சொல்லுவம் எண்டு விட்டிட்டன்.


வெளியின்ரை நடுவிலை மறிச்சுபோட்டாங்கள். எல்லா வாகனமும் நிண்டிட்டுது. முனியப்பரை கும்பிட எல்லா வாகனமும் நிக்கிறது வழமைதான். ஆனா அண்டைக்கு கொண்வே கடக்கும் வரை நிப்பாட்டி வைச்சிருந்த வாகனங்கள்தான் கோயிலடியிலை நிண்டது. இனி யெப்ப கொன்வே திறப்பான் எப்ப போகலாம் எண்டது இந்த முனியப்பருக்குத்தான் வெளிச்சம். அவருக்கும் அது தெரியுமோ தெரியாதோ?

ஜீவன் எங்கை போறம் எண்டு கேட்டான். அவன் இவ்வளவு நேரமும் ஜனா வீட்டை அல்லது சிவம் வீட்டை போறதெண்டுதான் நினைச்சிருந்தவன். ஜனா வீட்டையெண்டா செல்லச்சன்னிதி பாதையிலை போகவேணும். சிவம் வீட்டை எண்டா வல்லிபுரக்கோயில் பாதையிலை போகவேணும். செல்லச் சந்நிதியையும் வல்லிபுரத்தையும் விட்டா எங்களுக்கு உங்காலை ஒரு பக்கமும் தெரியாது.

நான் ”இல்லையப்பா அது வேறை வீட்டை போறம்” எண்டன். ”என்ன புதுசாத் தொடங்கியிட்டீரோ?” எண்டான். உவங்களுக்கு ஒரு நக்கல் பாருங்கோ. நான் ஆரைப் பார்த்தாலும் அதுக்கு ஒரு வருசத்துக்குள்ள வேறை யாரோடாவது கலியாணம் ஆயிடும். அப்பிடி ஒரு ராசி! அப்ப இன்னொண்டைத்தானே பார்க்கோணும். அது உவையளுக்கு நக்காலா கிடக்கு.

“என்ன பெயர்?”

சொன்னன்.

“எந்த ஊர்?”

“...எண்டு தான் நினைக்கிறன் வடிவா தெரியாது.”

“அதிலை எவ்விடத்திலை?”

எனக்கு விசர்தான் வந்தது. அந்த ஊரை இப்பத்தான் கேள்விப்படுறன். அதுக்கு எப்பிடி போறதெண்ட வழியே தெரியாது! அதுக்குள்ள பேந்து எவிவிடத்திலை எண்டா என்ன செய்யுறது?


“அவையின்ரை அப்பாவின்ரை பெயர் என்ன?”

“தெரியாது”

ஜீவன் கோபப்பட்டதுக்கு காரணம் என்ரை பதிலா இருக்க முடியாது. கனநேரம் வெயிலுக்கை நிண்டதுதான் காரணம் எண்டு நினைக்கிறன்.

ஐஸ்கீறீம் வண்டில்காரன் விற்றுக்கொண்டிருந்தான்.

வெய்யிலுக்கு குடிச்சா நல்லாத்தான் இருக்கும். நாங்கள் வரேக்கை ஒரு ஒன்பது மணியிருக்கும். அப்பத்தான் கொன்வேக்கு பாதை பூட்டினதா சொன்னவை. இனி இரண்டு மூன்று மணித்தியாலம் எடுக்கும்.

ஐஸ்கிறீம் முடிஞ்சுதாம். பின்னை அதிலை வந்து மறிபட்டு நிக்கிற சனம் எல்லாம் வேண்டினா முடியாதே? ஜூஸ்தான் இருக்கெண்டான். சரிதாவன் எண்டு வாங்கிக் குடிசாச்சு.

தண்ணியை குடிச்சா போக வேண்டியும் வருந்தானே? உந்தச் சனத்துக்கை எங்கைபோறது? தூரப்போகவும் பயமா இருந்தது. கீழை கிடக்கிறதுதுகள் காலுக்கை வெடிச்சு சிதறிப்போச்செண்டா.......அடக்கிக்கொண்டேன்.


கொன்வே திறக்க 11 30 மணியாச்சு


............................................................................

இதுதான் இந்த ஊர்.
ஏத்திக்கொண்டு வந்த ஜீவன் சொன்னான்.
ம் பிள்ளையைபோலை ஊரும் வடிவாத்தான் இருக்கு!

அப்பான்ரை பேரும் தெரியாம வீட்டுக் குறிப்பும் தெரியுயாம என்னெண்டு வீடு கண்டுபிடிக்கிறது?

பொறுங்கோ ஜீவன் இப்ப அது அவசரமில்லை!

“அப்ப எது அவசரம்? ”ஜீவனுக்கு கொஞ்சம் கோபம் வந்திருக்க வேணும்! அதுக்கு நானென்ன செய்யுறது. அப்பவே வேறை அவசரம் எனக்கு! போதாக்குறைக்கு ஜூஸ் வேறை குடிச்சாச்சு! முட்டிப் போச்சு!

நிப்பாட்டுங்கோ வண்டியை. நான் பெஞ்சிட்டு வாறன்.

“எங்கை உதிலையோ?” ஜீவனுக்கு வெட்கம் பிடிங்கித் தின்றது!

பெரிய மரமெண்டா அது வசதி பாருங்கோ! மரத்தின்ரை இடுக்குக்குள்ளை அல்லது கோறைக்கை அடிச்சிட்டு வரலாம்!

தற்செயலா உந்த நேரத்திலை அவையள் வந்தா?

ஜீவனின் பயம் நியாயமானது எண்டாலும் எந்த 12 மணி வெயிலுக்கை யார் வரப்போறா?

யாரோ வருகினமப்பா - பாதி வேலை நடந்துகொண்டிருக்கேககை ஜீவன் கத்தினான். பெய்யேக்கை கத்தினா அது நிண்டிடும். அதுக்குதான் உவர் வேலை காட்டுறார்.

எதுக்கும் எண்டு தலை திருப்பிப் பார்த்தன்.

ஓம் பாருங்கோ யாரோ பொம்பிளைப் பிள்ளையள் கூட்டமா வந்து கொண்டிருந்தினம். ஐயோ யாரோ பொம்பிளைப் பி்ள்ளையள் இல்லை. அது அநதப் பிள்ளையப்பா.
அவசரத்திலை இழுத்த இழுப்பிலை சிப்புக்குள் சிக்கிக் கொண்டது. என்ரை ஐயோ! வேதனையில் உயிர் போனது.

வயிறு இன்னமும் முட்டி நொந்து கொண்டிருந்தது.

......................................................................................................................

கனக்க கதைச்சுக் கொண்டு நில்லாதையும் பின்னேரமும் கொன்வே போடுவான். ஜீவன் சொன்னான்.

கொன்வேயோ?

நாங்கள் இப்பவே வெளிக்கிடுவம்.


அந்தப் பிள்ளைக்கும் கெதியா நிச்சயமாகிவிட்டது. என்ரை ராசி நல்லாத்தான் வேலைசெய்துகொண்டிருக்கு!

.....................

இந்தப் பிள்ளை யாரடா?

ஐயோ ஆளை விடு சாமி... ஜீவன் ஓடியே போய்விட்டான்.

இப்ப கொன்வே இல்லையாம்!

வாறியளே உதிலை ஒருக்கா போட்டு வருவம்????



















வியாழன், 8 ஏப்ரல், 2010

புகைச்சல்! புகைச்சல்!

முதன் முதல் செய்யிறது எண்டா ஒரு பதகளிப்பு இருக்கத்தான் செய்யும். அது எத்தினை தரம் கண்டு கேட்டு உண்டு உயிர்த்திருந்தாலும் அது அப்பிடித்தான்.

மூண்டு வருசம் மட்டும் தேவையில்லை எண்டதாலை நானும் பெரிசா கவனிக்கவில்லை. கண்ணை மூடித் திறக்க முன்னம் மூன்று வருசம் முடிஞ்சு போகும் எண்டு யார் கண்டது! காலம் போற போக்கைப் பாருங்கோ!

அதுவும் ஒரு வகையிலை நல்லதுதான். எங்களுக்கு மேலதிக செலவெண்டாலும் அதாலை மற்றைவையளுக்கு நன்மை எண்டா அதைப் பற்றி கவலைப் படாம வேலையை செய்து போட வேணும்.

உதுக்காகவே நான் யாழ்ப்பாணத்திலை இருந்து கொழும்புக்கு வரவேண்டியதாய்ப் போச்சு! குலுக்கிறது வேணுமெண்டா சினிமாவிலை பார்க்கேக்கை ரசிக்க கூடியதா இருக்கலாம். ஆனா வண்டி குலுக்கினா என்ன நடக்கும் எண்டு வன்னி றோட்டிலை போய்ப் பார்த்தாக்களுக்கு விளங்கும்.
வண்டி குலுங்கினா வண்டியும் நோகும் எண்டது வெளிப்படை உண்மை!



காலைமை செய்தா சுகம் எண்டு மனசுக்குள்ளை ஒரு பட்சி சொன்னதாலை வெள்ளணவே வெளிக்கிட்டன். பதிவுச் சான்றிதழும் கொண்டுபோகவேணுமாம். நல்ல வேளை உவன் சுதன் முதலே சொல்லியிட்டான். இல்லாட்டா அதை எடுக்க திரும்பி வந்திருக்கவேணும்.

செய்துகொண்டு போக எல்லாரும் லைனிலை நிண்டிச்சினம். என்ரை மட்டும்தான் அதுக்கை புதுசு. மற்றதெல்லாம் ஓடிக் களைச்ச சாமான்கள். அவையளும் வென்று காட்டுறம் எண்டு வந்து நிண்டதை பார்க்கத்தான் பெரும் சிரிப்பு!

எனக்கு முன்னாலை நிண்டதின்ரை சொந்தக்காரி ஒரு டொக்டர் போலை கிடந்துது. எங்கடை அம்மம்மாவின்ரை வயதிருக்கும். அப்ப அவ சொந்தமா வைச்சிருக்கிறதும் அவவைவிட வயசா இருந்தா என்ன அதிலை பிழை? ஆனா அது இந்த போட்டி, பரீட்சையிலை எல்லாம் தேறுமா எண்டது எனக்கும் சந்தேகம்தான்.






என்ரை புதுசை வைச்சுக் கொண்டு நானே பயந்துகொண்டிருக்க, அவா அந்த பழசோடை என்னென்று தைரியமாய் எல்லாம் வெல்லுவம் என்ற பாவனையிலை நிண்டாவோ தெரியாது.

அவவின்ரை முறை. தன்ரையோடை உள்ளுக்கை போனா. முக்கிறமாதிரி சத்தம் கேட்டது. ஒரே புகை மயம். பருப்பை திண்டிட்டு எங்கடை குசுமுட்டி விட்டது மாதிரி மணம் வேறை. மலிவானது எண்டதாலை மனிசி மாற்றி விட்டுட்டுதோ என்று எனக்கு ஒரே சந்தேகம். அது அதுக் கெண்டடிருக்கிறதிலை அதை அதை விடோணும் எண்டு ஒருதருஞ் சொல்லிக்குடுக்கேல்லை போலை!

நிச்சயமாய் அது பெயில்தான். அவ என்ன நினைச்சாவோ தெரியாது. விறுவிறு எண்டு கீழை இறங்கி அந்தப் பொடியனின்ரை கைக்குள்ளை ஏதோ வைச்சா. பிறகென்ன அந்தப் புகைவண்டியும் பாஸ்தான்.

கொழும்பு மாநகரில் ஓடும் வாகனங்கள் புகைக்காக பரிசோதிக்கப்பட்ட பின்னரே அனுமதி வழங்கப்படும். வானொலி செய்தி சொல்லிக் கொண்டிருந்தது.

இச் இச் இச் - சுவர் பல்லிக்கும் விசர் பிடிச்சிட்டுது.


வாழ்க இலங்கை மணித்திருநாடு!

என்ரை வண்டியும் பாஸ்!





சனி, 23 ஜனவரி, 2010

கவலையில் பங்கெடுத்தல்

தரித்திரம். மூதேவி...( இன்னும் இரண்டு கெட்ட வார்த்தைகளுடன்) சனியன் நீ விழுந்து சாகிறதுக்கு என்ரை வாகனமே அம்பிட்டது? இப்படி பேசியிருக்கலாம். ஆனால் அதற்கான காலம் அவகாசம் இருக்கவில்லை. அப்பிடிப் பேசுவது சரியோ எண்டும் தெரியவில்லை. ஆனால் எல்லாரும் அப்பிடி பேசுறவைதானே.


அதுக்கும் என்ன பிரச்சனையோ தெரியாது. வீட்டை அம்மா பேசியிருக்கலாம். தண்டச்சோறு என்று தகப்பன் திட்டியிருக்கலாம். அண்ணன்காரன் அல்லது தம்பிக் காரன் எதையாவது புடுங்கிக் கொண்டு போயிருக்கலாம். அக்காக் காறி அல்லது தங்கச்சி எதுக்காவது திட்டியிருக்கலாம். அல்லது தங்கச்சியின் பிரண்ட்ஸ்க்கு கடிதம் கொடுத்து பிடிபட்டு வீட்டிலை தலை காட்டேலாம றோட்டிலை நிண்டிருக்கலாம்.

ஆக்களுக்கு முன்னாலை கடி வாங்கி மானம் போயிருக்கலாம். அல்லது இவர்ரை அது சின்னன் எண்டு யாராவது இங்கிதம் தெரியாதது ஆட்களுக்கு முன்னாலை போட்டுடைத்து இருக்கலாம்.

அல்லாட்டி பக்கத்து வீட்டுப் பெட்டையை சைட் அடிக்க இரவுதான் நல்ல நேரம் எண்டு நினைச்சிருக்கலாம். அல்லது துவக்கோடை மதிலுக்கை நிண்ட ஆமிக்காரனை கண்டு பயந்து ஓடிவந்திருக்கலாம்.

வீட்டு யோசனையிலை நிண்டிருக்கலாம். இரவு சாப்பாடு கிடைக்காம பசி மயக்கத்திலை சாப்பாடு தேடி ஓடியிருக்கலாம். இல்லாட்டா பக்கத்துவீட்டிலை நிண்டவவின்ர சிக்னலை கண்டிட்டு அவசரத்திரல பாஞ்சிருக்கலாம்.





என்னவோ தெரியாது திடீரெண்டு என்ரை மோட்ட சைக்கிளுக்கிள்ளை அது பாய்ந்திட்டுது. அது தற்கொலை முயற்சி எண்டும் சொல்லமாட்டன். தப்பி வந்து விழுந்தது எண்டும் சொல்ல மாட்டன். அது தற்கொலைத் தாக்குதலாகவும் இருக்கமுடியாது. ஏனெண்டா அதுக்கும் என்க்கும் முன்விரோதம் இல்லை. அது விரும்பி சாப்பிடும் சாப்பாடு களை நான் விரும்பிச் சாப்பிடுவதில்லை. எந்த விதத்திலும் அதின்ர வழியிலை நானோ என்ரை வழியிலை அது வோ இதுக்கு முந்தி குறுக்கிட்டதில்லை.

இரவு நேரம். எனது வாகனத்தின் விள்க்கு வெளிச்சம் பண்களில் பட்டதில் கண்கள் மின்னியது. பூனைக் கண் பூனைக் கண் எண்டு சொல்லிக்கொண்டு றோட்டு முழுக்க பதிச்சு வைச்ச கல்லு மாதிரியே அதுவும் மினுங்கியது. இனிப் பூனைக்கண் எண்டு சொல்லுறதை மாத்தவேணும்.

மினுங்கின கண்ணிலை தெரிந்தது பயமா? வெறியா? அப்பாவித்தனமா எனக்குத் தெரியவில்லை.

நாய் சில்லுக்குள் குதித்துவிட்டது. நான் இறுக்கி அடித்த ஹோண் சத்தம் சங்கூதினமாதிரி ஊரை எழுப்பிவிட்டது.

வாள் எண்டு அது கத்தின சத்ததிலை நான் கத்தவேண்டிய ஐயோ எண்டது எனக்கு மறந்துபோச்சு. சில கணப்போழுதுகள் நிலத்தை முகம் முத்தமிடமுன் இழுபடடுச் சென்ற சில மீட்டர் தூரம் பல கிலோ மீட்டர்கள் மாதிரி தோன்றியது.

அண்ணை வாங்கோ தூக்குங்கோ...சொன்னபடி நிறையபேர் ஒடி வந்தனர். அட இரவு 9 மணிக்கும் எங்கடை சனங்கள் அலேட்டாத் தான் இருக்குது.

மொக்கத உணே? வேலிக்கால் நிண்ட ஆமிக்காரனும் ஓடிவந்தான்.

என்னைத் தூக்காதையுங்கோடா மோட்ட சைக்கிளை நிமுத்துங்கோ! பெற்றோல் வேற வெளியிலை ஓடப்போது...பின்னை பெற்றோல் விக்கிற விலையிலை.

அண்ணை சைக்கிளை நிமித்திப்போட்டம் நீங்கள் எழும்புங்கோ.

எங்கையப்பன் அந்த நாய்? எழும்பியவுடன் கேட்டேன்.

அந்தச் சனியன் ஓடியிட்டுது.

“பாவம் அதுக்கும் காயம் கீயமோ தெரியாது. ..”

பெடியனுக்கு அடிச்ச அடியிலை மூளை கலங்கியிட்டுது. ஆசுபத்திரிக்கு ஏத்துங்கோடா.... நின்ற வயசானதொண்டு சொன்னது.

இல்லையில்லை. சிராய்ப்பு காயந்தான். நான் வாறன்.

நாய்க்கு ஏதும் காயமோ?

நீங்கள் சொல்லுங்கோ எனக்கு விசர் பிடிச்சிட்டுதே?




திங்கள், 28 டிசம்பர், 2009

பழைய பேரூந்தும் புதிய சாரதியும்

கெடி கலங்கிப்போச்சு! இருக்காதாபின்னை? பஞ்சிகாவத்தை சுற்றுவட்டத்திலை நிண்டு கொண்டு எந்தப் பக்கம் வெட்டவேணும் எண்டு கேட்டா! நானும் வந்த புதிசிலை கொழும்பு தெரியாதுதான். கொழும்பு மட்டுமில்லை சிங்களமும். ஆரார் தமிழ் கதைப்பான் ஆரார் சிங்களம் கதைப்பான் எண்டு கண்டு பிடிக்க ஏலாம எல்லாரும் ஒரே மாதிரி இருந்ததாலை ஒருத்தரிட்டையும் கேட்காம எத்தினை ரோட்டை நடந்தே கடந்திருப்பன்!!! யாழ்பாணத்திலை நான் மூண்டு வரிசமா ஒரு பாட்டா செருப்பை பாவிப்பன். கொழும்பிலை அது மூண்டு மாதத்திலை தேஞ்சது எண்டா கொழும்பிலை நான் நடந்த நடைதான் காரணம். எண்டாலும் நானே கொழும்பை பழசிட்டன் எண்டா...நடுச்சாமத்திலை சி ரி பியிலை 45 பேரை ஏத்திக் கொண்டு வெளிக்கிடுற றைவர் முதலாவதாக கொண்டக்டரிட்டை கேட்டு திருப்பினால் வயிறு பகீர் எண்ணாம பாலை வார்த்த மாதிரி குளிந்துபோயா இருக்கும்.




கொட்டேனாவில இருந்து பஸ் எடடா எண்டு வழிகாட்டியதே சுதாதான். கொட்டேனாவிலை இருந்தும் வெள்ளவத்தையிலை இருந்தும் வெளிக்கிடுமடா. நீ கொட்டேனா பஸ் எடு எண்டு சொன்னவன் இந்த பஸ்சிலை பாட்டு போடுவாங்கள் எண்டு சொன்னான். என்ன சீ ரி பி பஸ்ஸிலை பாட்டு போடுறவங்களோ? என்னாலை நம்பேலாம இருந்தது. ஓமடா. அந்த பஸ் றைவர் எம் பி 3 பிளேயர் வைச்சு பாட்டு போடுறவன். சுதித் தமிழ்ப் பாட்டு. சத்தியம் பண்ணாத குறையாக சொன்னான் சுதா. அப்ப நான் ஐ பொட்டை கொண்டு போகத் தேவையில்லையே எண்டு கேட்க உன்னட்டை கிடந்தா கொண்டு போவன் எண்டான் நக்கலாக. குறுக்காலை போவார் என்னட்டை உதுகள் ஒண்டும் இல்லையெண்டதை உவனுக்கு சொல்லிப் போட்டாங்கள் போலை.

எனக்கென்ன? கொழும்பிலை வீடா வாசலா? கொட்டேனாவிலை பஸ் எடுக்கிறதெண்டா நீரோ வீட்டை படுக்கோணும் வெள்ளவத்தையிலையெண்டா அச்சுதன் வீட்டை படுக்கோணும். எல்லாம் ஒண்டுதானே! நிரோ வீட்டையே படுப்பம்.

எடே காலமை நாலுமணிக்கே போய் நிண்டு ரிக்கட் எடுத்துப்போடு என்று குண்டைப் போட்டான் அவன். காலமை நாலுமணியோ? அது நடுச்சாமமெல்லோ எனக்கு! அப்பத்தான் எப்பன் நித்திரையும் கனவும் வாற நேரம்.அவள் பாவி படிப்பு படிப்பு எண்டு திரியுறதாலை என்னவோ கனவிலை கூட லேற்றாத்தான் வருவாள். அதிகாலையிலை கனவு கண்டா பலிக்கும் எண்டு உவங்கள் சொல்லுறதாலை நானும் அவ லேற்றா வாறதைப் பற்றி ஒண்டும் சொல்லுறேல்லை. இண்டைக்கு ரிக்கெட் எடுக்கிறதெண்டா நித்திரையும் போச்சு! கனவும் போச்சு!

ஜீவனிட்டை சொன்னன். எடே என்னை ஒருக்கா நாலுமணிக்கு தட்டிவிடு. ரிக்கட் எடுக்க போகோணும். ஜீவன் அந்தக் காலத்திலை இருந்தே காலமை நாலுமணிக்கு அதுவும் மார்கழி மாதத்திலை குளிச்சுப்போட்டு சேமக்கலம் தட்டிக்கொண்டு பஜனைக் கோஷ்டியோடை போறவன். அதுக்காக அவனை பக்திமான் எண்டு நினைக்கக் கூடாது. நிண்ட நிலையிலை மழைமாதிரி தூசணம் பேசக் கூடியதும் அவன்தான். நான் சிவராத்திரிக்கே நித்திரை முழிக்காத ஆள். அவன் சொன்னான் “இரண்டு தரம் தட்டிப்பார்ப்பன். எழும்பேல்லை எண்டா மூஞ்சியிலை மூத்திரம் அடிச்சுப் போடுவன்”. உம் செய்யக் கூடிய ஆள்தான். ரிக்கட் எடுக்கிற நினைவிலை முழிச்சு முழிச்சு பார்த்திலை என்க்கு முழு இரவும் நித்திரை குழம்பிப் போச்சு!!!

ரிக்கட் எடுத்தாச்சு. 11.30 க்கு பஸ் கொட்டேனாவாலை வெளிக்கிடும். அப்பிடியே போய் பெற்றா பஸ் ஸ்டாண்டிலை நிண்டு இரவு 12.30 க்கு யாழ்ப்பாணம் வெளிக்கிடும் --ரிக்கட் எடுக்கேக்கை சொல்லித்தான் விட்டவை.

11 மணிவரை நித்திரை கொள்ளலாம் எண்டா நித்திரை வராதாம். அவள் வேற படிச்சுக்கொண்டிருப்பாள். அது பாவம் கண் முழிச்சு படிச்சுக் கொண்டிருக்க நான் விசரன் மாதிரி நித்திரை கொள்ளுறதோ! நான் நித்திரை கொள்ளேல்லை. பஸ்ஸிக்கை பார்ப்பம்.

பஸ் ஏறியாச்சு. பாட்டுப் பெட்டிக்கு வைச்சிருந்த இடத்தை கொண்டக்ரர் வாடகைக்கு விட்டிட்டான் போலை. அந்த இடத்தை எலி வாடகைக்கு எடுத்திருந்ததால் றெடியோ பெட்டி கிடக்கிற இடத்திலை பொந்துதான் கிடந்தது. எம் பி 3 கிளேயராயும் காணோம். சுதாக்கு போனைப் போட்டன். என்னடா இப்பிடி செய்து போட்டியே!!! “றைவர் மீசை வைச்ச ஆளோ?”அவன் கேட்டான்.

“ஓமடா”
யாழ்ப்பாண றைவருக்கு மீசை இருக்கிறது ஒரு பெரிய விசயமா!
“டிரௌசர் போட்ட ஆளா?”இது அவன்.

எனக்கு பத்திக் கொண்டு வந்தது. இனி அவர் அண்டவெயார் போட்டிருக்கிறாரோ எண்டு கேட்டாலும் கேட்பான்.!

“என்னடா சத்தத்தை காணேல்ல”

“இல்லை. வெள்ளைச் சாரம் கட்டியிருக்கிறார்.”

“அப்ப உது வேறை பஸ். வேறை றைவர்”

சரி. இனியென்ன செய்யுறது! நித்திரையாவது கொள்ளுவம் எண்டு பார்க்கத்தான் உது நடந்தது.

“உதாலையோ தம்பி வெட்டுறது?” மூன்றாந் தரமும் றைவர் கொண்டக்ரரிட்டை கேட்கேக்கை எனக்கு சுவராய் விளங்கிட்டுது. ஆள் புதுசு! முதன் முதலா கொழும்பு ரூட்டை குடுத்திருக்கிறாங்கள். பேந்தெங்கை நித்திரை கொள்ளுறது!

என்னைப் போலத்தான் எல்லாரும். பஸ் மதவாச்சி பொயிண்டுக்கு பதிலாய் மாத்தறைக்கு போயிடுமோ எண்ட பயத்திலை முழிச்சிருந்தினம். பின் சீட்டுக் காரர்களுக்கு விசயம் வெளிக்கேல்லை அவை நல்ல நித்திரை.

றோட்டுக்கு நடுவிலை பதித்த பூனைக் கண்ணிலை ஏறேக்கை பஸ் குலுங்கியது. முடக்கிலை பிறேக் அடிக்கேக்கை கிறீச்சிட்டது. பழைய வில்லுத் தகடுகள் குலுங்கின. பஸ்ஸிலை இருந்த எல்லாரும் எழும்பியிட்டினம்.

கொண்டக்ரரின் வழிகாட்டிலுடன் பஸ் குருநாகலுக்கால் போய்க்கொண்டிருந்தது. எனக்கு சாதுவா நித்திரை தூக்கியது. அயர்ந்து போனன்.

சர்ர்ர்ர்ர்

மூஞ்சியிலை ஜீவன் மூத்திரம் அடிச்சிட்டான்.
“ எடே நாலு மணியாச்சே!?”

கத்திக்கொண்டே நான் எழும்பியதில் மீண்டும் முழு பஸ்ஸூம் முழித்துக் கொண்டது.

நாலுமணிதான். ஆனால் பெஞ்சது ஜீவன் இல்லை. பஸ் முகடு. மிகிந்தலை. வெளியே மழை பெய்துகொண்டிருந்தது. மழைத்தண்ணி பஸ்ஸின் முகடுக்கால் மூஞ்சியில் வழிந்தது. சேட் நனைஞ்சு காற்சட்டை நனைந்து மூலஸ்தானத்துக்கையும் தண்ணி போட்டுது.

அரைச் சொகுசு பஸ்தானே. அதனாலோ என்னவா ஏசிக்கு பதிலாக ஓசிக் குளியல் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

திருவெம்பாவைதானே தம்பி! காலமை குளிக்க வேணும்! பக்கத்திலை இருந்த அன்ரி நக்கலா சொன்னா!!!!

பஸ்ஸின் முன் கண்ணாடியை துரைக்கும் வைப்பர்கள் வேலை செய்யாததால் பஸ் மெதுவாய் போய்க்கொண்ருந்தது.

தண்ணீர் தாராளமாக முகட்டால் ஒழுகிக் கொண்டிருந்தது.

எனக்கு திருவெம்பாவை சிவராத்திரியாக மாறி கடைசியில் ஆருத்திரா தரிசனம் நடந்துகொண்டிருந்தது.

27 12 2009

வெள்ளி, 4 செப்டம்பர், 2009

ஒரு காகமும் உஞ்சுவும்

நான் ஒரு கிழமைக்கு லீவு எண்ட உடனேயே அங்கை அல்லோல கல்லோலப் பட்டது. எப்ப ஊருக்கு போறியள் எப்ப வாறியள் எண்டு கேட்டால் நான் என்னத்தை சொல்ல? யாழ்ப்பாணம் போறதெண்டா என்ன சாதாரணமான விசயமே? உந்த குறுக்கால போவாரின்ர பிளைட்டிலை போனா ஒரு மாத சம்பளம் அப்பிடியே கரைஞ்சு போகும் எண்டதாலை நானும் ஆடிக்கொருக்கா அமாவாசைக்கு ஒருக்காதான் வெளிக்கிடுறது.

“யாழ்ப்பாணத்துக்கு பஸ்ஸிலை போறதெண்டா எவ்வளவு நேரம் எடுக்கும்?” கேட்டது ஒண்டுமே தெரியாத சிங்களப் பிளளை எண்டாதாலை சினப்பட முடியாமல் இருந்தது.

அது ஓடுற றைவரையும் பாதையின்ர கொண்டிசனையும் பொறுத்தது என்று பதில் சொன்னேன்.

“எப்பிடியெண்டாலும் கன நேரம் பஸ்ஸுக்கை இருக்க வேணும் என்ன?”

ஓ. குறைஞ்சது 10 மணித்தியாலம்.

“ஆ ஆ அப்ப பஸ்ஸுக்கை எறினா என்ன செய்வியள்?”

இதென்ன கேள்வி? ஒரு மூலைக்கரை சீட்டா பிடிச்சு நல்ல நித்திரை கொள்ளுறதுதான்!!!

“ஏக்கநம் வடன்நா” ( அப்பிடியெண்டா உதவாது)

ஏதோ சுற்றி வளைச்சு ஏதோ விசயத்துக்கு வருகினம் எண்டு விளங்கினாலும் என்ன விசயம் எண்டு பிடிபடவில்லை.

“நீண்ட தூரப் பயணங்கள்தான் உறவுகளை உருவாக்குகிறது. ”

ஆ! விசயம் பிடிபட்டிட்டுது.

“அநியாயத்துக்கு நித்திரை கொள்ளாம யாரையாவது பார்த்துக் கீத்து....”

கல கல எண்டு சிரிக்கேக்கை எல்லாப் பொம்பிளையயும் வடிவுதான்!!!!!!

-- -- -- -- -- -- -- -- -- -- -- -- --- ------------------------------------------

யாழ்ப்பாண புகையிரத நிலையம்.
பஸ் எடுக்கலாம்.
கப்பலுக்கு ஆட்கள் ஏற்றப்படலாம்.
விமானப் பயணிகள் ஏற்றப்படலாம்.

ஆனா புகைவண்டியிலை மட்டும் ஏற ஏலாது.

உது எங்கடை மசுக்குட்டியின்ரை கண்டு பிடிப்பு. மசுக்குட்டியின்ரை உண்மைப் பெயர் எனக்கும் மறந்து போச்சு. உடம்பு முழுக்க மயிர் வளர்ந்து இருந்ததாலை மசுக்குட்டி எண்டாதான்அவனை எல்லாருக்கும் தெரியும்.

மசுக்குட்டியும் நானும் அண்டைக்கு கொழும்புக்கு வெளிக்கிட்டம். ஆறுமணிக்கே வந்திட்டம். பத்து பஸ்ஸிற்கும் சனம் ஏற்றி எல்லா பஸ்ஸும் ஒண்டாதான் வெளிக்கிடும் எண்டதாலை பத்து பஸ் சனமும் சிங்கள மகாவித்தியாலய முன்றலில் திரண்டு இருந்தது.

கிடந்த ஒண்டிரண்டு கதிரையளை தூக்கிப் பாட்டுக் கொண்டு எல்லாரும் கொஞ்சம் நிழல் பக்கமாக ஒதுங்கி இருந்தினம்.

தங்களை விட்டிட்டு பஸ் வெளிக்கிட்டாலும் எண்ட பயமுள்ள ஆக்கள் பஸ்ஸின் நிழலிலேயே குந்தியிருந்தினம்.

நேற்றே டிக்கட் புக் பண்ணியிட்டம் எண்ட துணிவிலை கொஞ்சம் தொலைவாக ஒரு நிழலில் கதிரையை போட்டு ஆசுவாசமாக சாய்ந்தேன். பஸ் வெளிக்கிட இன்னும் 2 மணித்தியாலத்துக்கு மேலே இருந்தது.




கலகலவெண்டு ஒரு சிரிப்புச் சத்தம்!

கம்பஸ் பிள்ளையள் மாதிரி இருந்தது.

“சும்மா போற வாற வழி எல்லாம் நித்திரை கொண்டா வேலையில்லை!!!” அண்டைக்கு அதுகள் சொன்னது நினைவுக்கு வந்தது.

காதைத் தீட்டிக் கொண்டேன்.

ஒரே சிரிப்பும் கும்மாளமுந்தான்.
மூன்று பேர்.

கைக்கெட்டும் தூரத்திலேதான் கதிலை போட்டு இருந்தார்கள் என்றாலும் நான் மற்றப்பக்கமாக இருந்ததிலை வடிவாத் தெரியேல்லை.

“கையை கழுவிப்போட்டு வாறமடி”

ஒருத்தியை காவலுக்கு வைத்துவிட்டு இரண்டு பேர் போனார்கள்.
போற போக்கிலை எனக்கம் ஒர பார்வை வீசிப் போனார்கள்.

நீங்கள் அமரர் கல்கி எழுதின பொன்னியின் செல்வன் நாவலிலை வாற வந்தியத் தேவனை கண்டிருக்கிறியளா?
அப்பிடியில்லை எண்டா என்னை பார்த்துக் கொள்ளலாம்.
வந்தியத்தேவனுக்கு அடிக்கடி கிளுகிளுப்பு வாற மாதிரித்தான் எனக்கு அண்டைக்கு!!

கையை கழுவிவிட்டு வந்த இரண்டும் கதிரையை இழுத்துப்போட்டுக் கொண்டு சாப்பாட்டு பாசலை அவிழ்க்கத் தொடங்கியது.

ம்ம்
புட்டும் கத்தரிக்காய் பொரிச்ச குழம்பும். பார்க்காமலே வாசனையை வைத்து தெரிந்து கொண்டேன்.

கையை கழுவாம நிண்டது கையை பிசைஞ்சு கொண்டு நிண்டது. இனி கையை கழுவப்போனா திரும்பி வாறதுக்கு இடையிலை எல்லாம் முடிஞ்சு போம் எண்டு பயத்திலையாக்கும்.

மற்ற இரண்டும் புட்டை பிசைந்து , “ ம், ஆக்காட்டு ” என்று ஒரு வாய் ஊட்டி விட்டுதுகள்.

ம்.

நாங்கள் உனக்கு ஏன் சீத்தினனாங்கள் தெரியுமே?

புட்டு வாய்க்குள்ள இருந்ததாலை வாயைத் திறக்காமலே தலையை அப்பிடியும் இப்பிடியும் ஆட்டினது.

அம்மா சொன்னவா சாப்பிடத் தொடங்கமுன்னம் காக்காக்கு போட வேணும் எண்டு!!!

ஹாஹாஹா

வெடிச்சிரிப்பு சிரித்ததில் புட்டுச் சன்னங்கள் எனக்கு அருகிலும் வந்தன.

இரண்டு அன்னங்களும் காக்காவும் ( அதுதான் பாருங்கோ ஒராள் கறுப்பு மற்ற இரண்டும் கொஞ்சம் வெள்ளை) பிறகு சண்டை பிடியாமல் சாப்பிட்டு முடித்தன.

சாப்பிடும் போதும் கல கல எண்டு சிரிப்புத்தான்.


சாப்பாடு காணுமோடி?- மூன்றிலை ஒன்றுதான் கேட்டிருக்க வேணும்.

“ம்.ம்” இது மற்ற இரண்டும்.

அப்பிடியெண்டா மிச்சத்தை உஞ்சுவுக்கு எறியுங்கோ! அப்பவிலை இருந்து பார்த்தக் கொண்டிருக்குது!!!

நான் கதிரையை தள்ளிப்போட்டு உட்கார்ந்து கொண்டேன்.

நல்லவேளை! மசுக்குட்டி தண்ணி குடிக்கப் போயிருந்தான்!!







சனி, 13 ஜூன், 2009

சைவக்கடை

பசி வந்திடப் பத்தும் பறந்து போகும் எண்டு சொன்னதாலைதான் பசி வரமுன்னம் கிள்ளுற வயிற்றை கவனிக்க நான் முன்னுரிமை குடுக்கிறது. சாப்பாடு எண்டது கொழும்பிலை லேசுப்பட்ட விசயமில்லை. கொழும்பிலை மட்டுமில்லை எங்கையும் அது அப்பிடித்தான். எண்டாலும் என்னைப்போல தாவர பட்சணியளுக்கு சுத்த சைவக்கடையை தேடிப்பிடிக்கிறது இப்ப வேணுமானால் சுகமாக இருக்கலாம். ஏனெண்டா சந்திக்கு சந்தி சைவக்கடை இருக்கு. ஆனா நான் வந்த 2000 ஆண்டிலை உந்தளவுக்கு சைவக்கடையள் இருக்கேல்லை எண்டது உண்மை. அதைவிட திக்கும் தெரியாம பாசையும் தெரியாம இருந்த என்க்கு பக்கத்து றோட்டிலை இருந்த கடையை கண்டுபிடிக்கவேபத்துநாளாய்ப் போச்சு.

அப்ப இடியப்பம் ஒண்டு ஒரு ரூபா ஐம்பது சதம். இடியப்பம் எண்டாலும் அது ஆமான இடியப்பம்தான். ஐந்து இடியப்பந் திண்டாலே வயிறு நிரம்பிவிடும். ஆனா பாருங்கோ வரவர எல்லாம் விலையேறுறதுதானே. இப்ப இடியப்பம் ஒண்டு ஆறு ரூபா. விலையேறுறது மட்டுமல்ல எங்கடை சனம் மாதிரி அதுவின்ர சைசும் மெலிஞ்சுகொண்டே போகுது. இப்பிடித்தான் பாருங்கோ ஒருநாள் ஐஞ்சு இடியப்பத்துக்கு ஓடர் பண்ணி விட்டு குந்திக்கொண்டு இருக்க இடியப்பம் வந்து சேர்ந்துது. ஏதோ ஒரு சந்தேகத்திலை எண்ணிப் பார்த்தா நாலு இடியப்பந்தான் இருக்குது. வந்ததே கோபம். இடியப்பம் கொண்டு வந்து வைச்சவனுக்கு சொன்னன். இருந்கோ எங்கை பார்ப்பம் எண்டிட்டு அந்தாள் என்ன மாணம் பண்ணிச்சோ தெரியாது ஒரு இடியப்பத்தை பிடிச்சு உதற அது இரண்டு இடியப்பமானது. இப்ப சரியே எண்டு கேட்டிட்டு அந்தாள் போட்டுது. என்க்கெண்டா பணமா போச்சு. நல்லவேளை அந்த நாலு இடியப்பத்தையும் உந்தாள் உதறி அந்தநாலும் எட்டு இடியப்பமாய் குட்டிபோட்டிட்டுது எண்டால்....
பொக்கட்டிலை வேற காசில்லை. பேந்து தேத்தண்ணியை குடிக்காம தியாகம் செய்துதான் பில் கட்ட வேணும். எங்களுக்கு கொழுப்பொ கொலஸ்ரோலோ சேர்ந்து போடக்கூடாதெண்டு சாப்பாட்டு கடைக்காரருக்கு எவ்வளவு அக்கறை பாருங்கோ. இல்லாட்டா மெலிஞ்ச ஸ்லிம்மான இடியப்பமெல்லாம் எங்களுக்கு தருவினமே?

சிக்கனத்துக்கு பெயர்போனது சைவக்கடையள்தான். முதல்நாள் சோறு அடுத்தநாள் தோசையாகவும் முதல்நாள் வடை அடுத்தநாள் சாம்பாறாகவும் வாற அவதாரங்கள் கடவுள் கூட எடுத்திருக் மாட்டார். இப்பித்தான் ஒருநாள் இட்டலி கேட்க ஒரு வெண்பொங்கல் மாதிரி ஒண்டை கொண்டு வந்து தந்திட்டினம். என்னப்பா இது எண்டு  கேட்டதற்கு அது அரிசி கொஞ்சம் அரைபடவில்லை எண்டு பதில் வந்தது.



என்னோட வெளியிலை சாப்பிட வாறதுக்கு என்ர பிரண்ஸ்க்கு கூட அவ்வளவு விருப்பமில்லை. ஏதாவது காரஞ்சாரமாய் மச்சம் சாப்பிடாமல் எப்ப பார்தாலும் சைவம் சைவம் எண்டு சாகிற என்னை பார்த்து அவங்களுக்கு எரிச்சடீலா தெரியாது.  இதுக்குத்தான் ஒரு நாள் , “வாங்கோடா சாப்பிடுவம்” எண்டு கூட்டிக்கொண்டுபோய் ஒரு சில்லி பரோட்டாவை வாங்கி ( போடேக்கையே நல்லா மிளகு போடச்சொல்லிப்போட்டு) கொடுத்தது தான் ... அண்டையிலை இருந்து ஒருத்தரும் என்னட்டை காரஞ்சாரமாய் சாப்பிட கேட்டதே இல்லை. இதிலையும் வந்து மாட்டுப்பட்ட இப்பாவி ஒருத்தன், சாப்பிடேக்கை தொண்டை எரிந்தாகவும் பிறகு இரவு வயிறு எரிந்ததாகவும் அடுத்தநாள் வெளிவாசல் பற்றி எரிந்ததாகவும் முறைப்பட்டுக் கொண்டான்.



இப்பிடித்தான் பைனல் எக்சாம் அண்டைக்கு சைக்கிளிலிலை ஓடிப்போய் மருதானையிலை சாப்பிட்டிவிட்டு பின்னேரம் வேர்த்து விறுவிறுக்க வந்த என்னைப் பார்த்து எல்லா எக்சாமினரும் பாவம் பெடி எக்ஸாமை கண்டு வேர்த்து விறுவிறுக்குதாக்கும் எண்டு முணுமுணுத்தது என்ர காதுவரை கேட்டது.

எங்கடை வேலைசெய்யிற இடத்துக்கு சிலவேளை கேக் வரும். முட்டை போட்டிருக்கும் எண்டதாலை நான் சாப்பிடுறதில்லை. ஆனா என்ர பேரிலை கேக்கின்ர அரைவாசி முடிஞ்சிடும். எப்பிடி எண்டு கேக்கிறியளோ?! 
அவற்றை துண்டை நான் எடுக்கிறன் எண்டு எல்லாரும் என்ர எக்கவுண்டிலை சாப்பிட்டா அது முடியாம என்ன செய்யும்.!!

நான் சந்தோசமாய் போறதெண்டா தமிழ்க் கல்யாணவீடுகள் தான் பாருங்கோ. சுத்த சைவமாய் சாப்பாடு போட அதுதான் நல்ல இடம். ஆனா பாருங்கோ வந்த கனபேர் திட்டித் திட்டித் தான் சாப்பிடுறவங்கள். இண்டைக்கும் சைவம் சாப்பிட வேண்டி வந்திட்டுது எண்டு.

கேகாலைக்கு வேலைக்கு வரேக்கை ஒரு பயம் இருந்தது. அங்கை சைவக்கடை இருக்குமோ எண்டு. பஸ்ஸாலை இறங்கி தலை நிமிர்ந்து பார்த்தா தட்டுப்பட்டது சைவக்கடை போட்தான்.

தமிழன் எங்கை இருக்கிறானோ அங்கை சைவக் கடையும் இருக்கும்!!!


வியாழன், 21 மே, 2009

லீவும் கல்யாணவீடும்.

கலியாணவீட்டுக்கு போகோனும். அதுவும் ஐஞ்சு வருசமாய் எங்களோட படிச்சதின்ர கலியாணவீடு. அஞ்சு வருசமாய் அவையள் படிச்சிருக்கலாம் ஆனா நீ படிச்சனியோ எனக் கேட்டு என்ர அடி மடியிலை கை வைக்கக் கூடாது. கலியாணவீடெண்டா சும்மா இல்லை. லீவு எடுக்கிறதெண்டா கூட வேலை செய்யுறவன் ஒவ்வொருத்தனும் ஏதோ எதிரியை பார்க்கிற மாதிரிப் பார்ப்பான். பின்னை சும்மாவே. கவர் அப்புகுக்கு சைன் வைச்சவன் தானே நிண்டு வேலைக்கு முறியோணும். அது வேற இப்ப டெங்கு காய்ச்சல் டைம். வேலை சொல்லி மாளாது. எண்டாலும் ஒரு சாக்குப் போக்கும் சொல்லேலாது. ஒரு மாததுக்கு முன்னமே காட் கிடைச்சிட்டுது. இப்பபோய் லீவு இல்லை எண்டு சொன்னா கற்பூரம் அணைச்சு சத்தியம் பண்ணினாலும் நம்பாதுகள். 

19ம் திகதியும் ஆச்சு இன்னும் லீவு போட இல்லை. நாட்டிலை வேற நடக்கிறதுகள் அவ்வளவு நல்லாத் தெரியேல்லை. உந்த லட்சணத்திலை கலியாணவீடாவது ....

மததியானம் எஸ் எம் எஸ் வந்தது. நாளைக்கு பொது விடுமுறையாம். ஆனாலும் மனது சந்தோசமாய் இல்லை.எதப் பிரச்சனை தீராட்டாலும் ஏதோ ஒரு வழியா லீவுப் பிரச்சனை தீர்ந்ததே. சரியொருக்கா போட்டு வருவம் எண்டு நினைக்க மழை ஊத்தத் தொடங்கியது. மழையெண்டா மோட்டர் பைக் ஓடுறது கஸ்டம். பைக் எண்டா ஒள்றரை மணித்தியாலத்திலை போய்ச் சேரலாம். பஸ் என்டா அது ஆடிஆடி போறதுக்கிடையிலை தாலிகட்டு முடிஞ்சிடும். பஸ்வேற ஓடுமோ தெரியாது... வெள்ளன வெளிpக்கிடுற அவசரத்திலை காலமை சமைக்கவும் இல்லை. ரீ போடவும் இல்லை. எல்லாம் போய் கொழும்பிலை பார்ப்பம்.

கேகாலையிலை இருந்து கொழும்புக்கு டிரெக்ட் பஸ் இருக்கு. கொழும்பு கண்டி றோட்டுத்தானே. கண்டி பஸஸிலும் ஏறலாம். 





பஸ் ஸ்டாண்டுக்கு போனா பஸ் நிற்குது ஆனா ஓடாதாம். என்னடாப்பா இது விடுமுறையோ இல்லை ஹர்த்தாலோ? விடுமுறை எண்டா சாப்பாட்டுக் கடை மருந்துக்கடை திறக்கவேணும். போயா எண்டா பார் பூட்டவேணும். பஸ் ஓட வேணும்.

ஏதோ ஒருமாதிரி வந்த கண்டி பஸ்ஸில் தொற்றிக் கொண்டேன். அப்பிடியே பெற்றா போய் அங்கையிருந்து வெள்ளவத்தை போறதுதான் திட்டம். நல்லசேளை பெற்றாவிலை பஸ் நிண்டது. ஆனா சாப்பாட்டு கடையளும் மற்றக் கடையளும் பூட்டு.

சரியெண்டு வெள்ளவத்தைக்கு போனா. அடப்பாவமே. அஙகையும் கடை பூட்டு. யார்யாரோ கத்திக்கொண்டு ஆர்ப்பாட்ட ஊர்வலம் போண்க்கொண்டிருந்தாங்கள்.

எனக்கோ சரியான தண்ணிவிடாய். காலமை ரீ வேற குடிக்கேல்லை. பியர்கடை வைன் சொப் மட்டும் திறந்திருக்கு.

போன் கீச் கீச் எண்டது. 

என்னடா?

விசயம் தெரியுமே ? ஆள் அதுக்கை இல்லையாம்.

தண்ணிவிடாய்க்கு ஒரு மிடறு அடிச்சிட்டு போனாலும் பறவாயில்லை மாதிரி சந்தோசமாய் இருந்தது.

நீங்கள் சொல்லுங்கோ..

இது விடுமுறைபோ ஹர்த்தாலோ???

20.05.2009


புதன், 13 மே, 2009

வடையும் எஸ் எம் எஸ் உம்.


எங்கடை நாட்டிலை டெலிபோன் கொம்பனிகள் நல்லா உழைச்சுக் கொட்டினதுக்கு ஒரு காரணம் காதலர் பெருந்தகையள் எண்டா நீங்கள் கட்டாயம் ஒப்புப் கொண்டுதான் ஆகவேண்டும். மணித்தியாலக் கணக்கா காதுக்கை போனை ஓட்டி வைச்சு கதை கதை எண்டு கதைச்சு பில்லை சந்திர மண்டலம் மட்டும் ஏற்றி வைக்கிற பெருந்தகையள் அதுகள் தான். அதுசரி இப்பிடி யாரும் மணிக்கணக்கில அலம்புறதுக்கு கிடைக்காத பூத்தெரிச்சலிலை நான் புலம்புறதெண்டு சொன்னாலும் நான் அதை கணக்கிலை எடுக்க மாட்டன். 


ஆனாலும் பாருங்கோ இப்பிடி காதலிச்சுக் கொண்டிருக்கிற ஆக்களோட திரிஞ்சால் நிறைய விசயம் அறியலாம். எந்த ரியூசனுக்கு போனாலும் வெளிக்காத விசயங்கள் இவையளோட நடவடிக்கையால தெரியவரும். நானும் நிறைய பேரைக் கண்ட அனுபவத்தை உங்கேளோடை கதைக்காட்டா என்ர தலை சுக்கு நூறாய் எல்லே வெடிச்சிடும். 

செல்போன் கொம்பனியளிலை சில விசேச நம்பர்களை பெறவேணும் எண்டா கொஞ்சம் காசு கூடக் கட்டியால் கிடைக்கும் எண்டது உங்களுக்கும் தெரியும். கப்ஸ் வாகன நம்பருகள் மாதிரி நினைவிலை நிற்கிற நம்பருகள் அவை. ஆனா அதுக்கு செலவளிக்கிறதிலும் பார்க்க கூட அலையோணும் பாருங்கோ உங்கடை ஆளின்ர நம்பரை எடுக்க. அவவோட கூடத்திரியுறதுகளுக்கு ஏதாவது வாங்கிக் குடுத்து அல்லது அவவின்ர தம்பிக்காரனின்ரை ஒரு சில கோரிக்கைகளை நிறைவேற்றி அல்லது தெரிஞசவன் பறைஞ்சவன்ர காலிலை விழுந்து இப்பிடி செய்யிற லஞ்ச லாவணியங்கள் கொஞ்சமில்லை பாருங்கோ. 

இப்பிடித்தான் என்ர பிரண்ட் ஒருத்தனுக்கு ஒண்டு செற்றாச்சு. இடையிலை என்ன பிரச்சனையோ தெரியாது திடீரெண்டு அவவின்ர பேச்சுவார்த்தை நிண்டு போச்சு. பெடி தவியா தவிச்சிட்டுது. ஆனா என்ன போனிலைதான் எஸ் எம் எஸ் இருக்கே. பெடி அனுப்பிக் கொண்டே இருக்கும். ஒவ்வொரு ரீற் ரீற் எண்ட சத்தமும் டிலிவரி ரிப்போட்டாம்.  ஒரு மெசேஜுக்கு பத்து பதினைந்து டிலிவறி ரிப்போட் வருமோ என்னவோ தெரியாது அவனின்ர போன் ஒரு ஐந்து நிமிசததுக்கை இருவது முப்பது முறை ரீற் ரீற் எண்டு சத்தம் போடும். ஆனா அந்தப் பிளளையோ ஒரு றிப்ளையும் அனுப்பிறதா தெரியேல்லை. உன்ர வயிறு எரியும். என்னத்துக்கு எண்டு கேட்கிறியளே? கணக்கை பாருங்கோவன். என்னதான் ஒரு மெசேஜ் இரண்டு ரூபா எண்டு கொம்பனி சொன்னாலும் இந்த வரி இந்த வரி எண்டு போட்டு அது இரண்டுரூபா அம்பேசமாகத்தான் இருக்கும். உவன் பாவி சராசரியா 20 மெசேஜ் அனுப்பினாலும் ஏறத்தாழ 50 ரூபா. உந்தக் காசுக்கு நாங்கள் மூண்டு வடையும் இரண்டு ரீயுமாவது சாப்பிட்டிருக்கலாம். ( அப்ப வடை 9 ரூபா ரீ 10 ரூபா) குறுக்கால போறவன் அனுப்புற மெசேஜுக்கு ரிப்ளையையும் காணேல்லை. வாசிக்கிறாளோ அல்லாட்டா வந்தவுடனை அழிக்கிறாளோ தெரியாது. உந்தச் சந்தேகத்தை நான் அவனுக்கு சொன்னன். அவன் சொன்னான் அவ கட்டாயமாக வாசிப்பா எண்டு. உவங்களை என்னெண்டு நம்புறது. காதலிக்கிறவன் எல்லாம் பொய்தானே சொல்லுறவன். அந்தப் பெட்டை வேறை ஒரு பதிலும் போடவில்லை யெண்டா என்ன அர்த்தம். மெசேஜ் எல்லாம் நேரை குப்பை கூடையுக் கை போகுது எண்டுதானே.


அவனுக்கும் விளங்கியிட்டுது. நான் சந்தேகப் படுறன் எண்டு.

 ” இப்ப உன்க்கு என்ன வேணும் ? அவ வாசிக்கிறாவோ இல்லையோ எண்டுதானே?”

நானும் கோயில் மாடு மாதிரி தலையை ஆட்டினன்.

அவன் மெசேஜ் அடித்தான்.( இங்கிலிசிலைதான்)  அன்பே உனக்கு ஏதோ காரணத்தாலே என்னைப் பிடிக்கவில்லை எண்டு தெரிகிறது. நீயும் பிடிக்கவில்லை என்பதை தெரிவித்தால் நான் காத்திராமல் மறந்து விட்டு மற்றைய வேலையை பார்ப்பேன். உடன் பதிலிடவும்.

அனுப்பி ஒரு நிமிடம்கூட ஆயிருக்காது ரிப்ளை வந்தது. ”நான் உன்னை வெறுக்கிறேன். மறந்துவிடு என்னை.”

காட்டிப்போட்டு கேட்டான். என்ன இப்பவாவது நம்புறியா?

திறந்த வாய்க்கை இலையான் பூந்தது கூட தெரியாமல் வாயை பிளந்து கொண்டிருந்த நான் என்ன சொல்லுறது. அவன் போய்விட்டான்.

உது நடந்தது 2001 இல. 


கொஞ்சநாள் போக நானும் கஸ்டப் பட்டு ஒரு நம்பரை அவனின்ரை இவனின்ரை காலிலை விழுந்து எடுத்தன். போட்ட ஒரு மெசேஜுக்கும் ரிப்ளை இல்லை. அட அநியாயமே! உந்தக் காசுக்கு வடை வாங்கித் திண்டிருந்தாலும் மிச்சம். என்ன செய்யுறது. 

எழுதினேன். 
நானும் ஒரு கொள்கை(?!!)யோடதான் இருக்கிறன். பிடிக்காட்டா சொல்லும் நான் கரைச்சல் குடுக்கமாட்டன். 

ரிப்ளை வந்தது
நான் எப்பவோ சொல்லியிட்டன். இண்டையிலை இருந்தாவது மரியாதையாக(?!!) மெசேஜ் அனுப்புவதை நிப்பாட்டவும்.

ஹுஹு ஹு

வடைக்காசு வீண்போகவில்லை. 

வாசிச்சிருக்கிறா.

இப்ப வடை 25 ரூபா. மெசேஜ் 1ரூபா 50 சதம்.

கே காலையிலை வடை 15 ரூபா.

வெள்ளி, 24 ஏப்ரல், 2009

அப்பு சாமிக்கு அரோகரா


அப்பு சாமிக்கு அரோகரா எண்ட உடனே முன்னாலையும் பின்னாலையும் பொத்திக்கொண்டு நீங்களுந்தான் சின்னப் பிள்ளையிலை ஓடியிருப்பியள். அதுவரை அம்மணமாக நின்றாலும் வராத வெட்கம் அப்பு சாமிக்கு அரோகரா எண்டதும் எங்கையிருந்து வாறதெண்டு எனக்கு இப்பவும் தெரியாது. அது மந்திரச் சொல் பாருங்கோ. இல்லாததையும் வரவழைக்கும்


சின்னஞ் சிறிசுகளுக்கு காற்சட்டை போடப் பிடிக்காது. எனக்குந்தான். ஆனா உஞ்சு வந்து கௌவிப்போடும் எண்டு பயமுறுத்தினா உடனே போட்டக் கொள்ளுறது. ஒருநாள் இப்பிடித்தான் பூனைக்குட்டியோட விளையாடிக் கொண்டிருக்கேக்கை அது கையிலை விறாண்டிப்போட்டுது. எரிஞ்ச எரிவெண்டா. நல்லவேளை அண்டைக்கு காற்சட்டை போட்டிருந்தன். ஆனா அண்டையிலை இருந்து பூனை எலி கரப்பொத்தான் எல்லாத்துக்கும் பயந்து காற்சட்டை போட்டுக்கொண்டுதான் இருக்கிறது. எங்கடை வீட்டுக்கு பக்கத்திலை பிள்ளையார் கோயிலிலை வைரவர் நாயோட நிண்டார். துணிஞ்ச கட்டைதான் உஞ்சுவுக்கே உந்தாள் பயப்பிடவில்லையெண்டா......

தமிழாக்கள் தெய்வ சிந்தனை கூடின ஆக்கள் க்ண்டியளோ. சேம் சேம் பப்பி சேம் எண்டு கத்தாம அப்பு சாமியை நினைக்கிற அந்தச்சனத்தை போல முன்னேற்றமான சிந்தனையை நான் வேற எங்கையும்  காணேல்லை. இது மட்டுமே கோயில் அடிக்கிற கண்டா மணிக்கு றைமிங்காக ...........மணி எண்டு பேர்வைச்ச தமிழனை... மாலைபோட்டு கும்பிடவேணும். குஞசு எண்டால் சின்னன் எண்டு அர்த்தமாம்.


நாங்கள் ஆண்டு 5 மட்டும் படிச்சது கலவன் பாடசாலை. பள்ளிக் கூடம் எண்டா எங்களுக்கு படிப்புதானே சிந்தனை. அரிவரியிலை சொல்லித்தந்ததெல்லாம் வந்து பாத்றூமிலை தான் சுவத்திலை எழுதுறது. பென்சில் பிடிச்சு எழுதுறதை விட கஷ்டமான வேலை பாருங்கோ. நல்லா வயிறு முட்டியிருந்தால் தான் ஆவன்னா இனா ஐயன்னா எழுதலாம். அல்லாட்டா அரைவாசியிலை இங்க் முடிஞ்சிடும். இஞ்சை கொழும்பை மாதிரி டைல்ஸ் போட்டு யூரின் கொமட் எல்லாம் கட்டியிருக்காது. முழுச்சுவரும் எங்களுக்குத்தான். கோசலை ரீச்சர் கூட எங்களுக்கு அடிக்கிறது இல்லை. ஒருவேளை இந்த விசயம் அவவுக்கு தெரியாதோ அல்லது உள்ளுக்கை போக பஞ்சியிலை வாசலிலை அடிச்சுப்போட்டு வாற பெடியளை விட நாங்கள் பறவாயில்லை எண்டு நினைச்சாவோ தெரியாது. எங்கடை பெட்டையளை நினைக்க பாவமா இருக்கும். ஒரு ஆனா ஆவன்னா எழுத வக்கில்லாததுகள் எப்பிடி அரிச்சுவடி யாஸ் பண்ணப் போகுதுகள் எண்டு பரிதாபப் படுறதுதான். எது எப்பிடியிருந்தாலும் கொக்குவில் சந்தியின் மேற்குப் பகுதி நாற அங்கையிருந்த மீன் சந்தை காரணம் எண்டா, சந்தியின் கிழக்குப் பகுதி நாற எங்கடை சுவர்ச் சித்திரங்களதான் காரணம்.

உப்பிடித்தான் ஒரு பெடியன் சித்திரம் வரைஞ்சு போட்டு சிப்பை மூட மறந்து வகுப்புக்கை வந்திட்டான். அதை மற்றவன் கண்டு அரோகரா என்ன.... அதை எல்லாப் பெட்டையளும் பார்க்க.. எங்கட வகுப்பு ஆண் குலத்துக்கே அண்டு கரிநாள்.




இப்பிடி வளந்ததால குளிக்கேக்கை கூட நான் வலுங்கவனம். ஆராவது பார்த்து அப்பு சாமி எண்டா என்னாகிறது. வளந்து பெரிசான பிறகும் இந்தக் கூச்சம் மாற இல்லை.

கம்பஸ் வந்தாச்சு. ராகிங் அது இது எண்டு எதுவுமே இல்லை. புல்லரித்தது. இல்லாட்டா என்ன கூத்தெல்லாம் ஆட வேண்டி வந்திருக்கும்.

சீ வி எஸ் மொடியுல் முடியும்வரை ஹொஸ்டல் ரூம் கிடைக்கவில்லை. அந்தக் காலத்தில் ஸ்பெசல் கோட்டா ஒண்டும் இல்லாததால திவா அண்ணை ரூமிலைதான் கஷுவல்ரி நாளிலை படுக்கிறது. காலமை எழும்பி குளிக்கப்போனா.... பாத்றூமுகள் ஒண்டுக்கும் கதவில்லை. ஒவ்வொரு ஷவருக்கு கீழையும் ஒவ்வொரு வயிரவ கடவுள்கள் குளிச்சுக் கொண்டிருந்தார்கள்.  வாற ஒவ்வொருத்தரும் கட்டியிருந்த டவலை கழட்டி தணிலை போட்டுட்டு குளிச்சுக் கொண்டிருந்தார்கள். அட இந்த ஊரிலை இதுதானோ வழக்கம்? நானும் டவலை கழட்டி தூணிலை போட்டிட்டு குளிச்சாச்சு. நல்லவேளை யாரும் அப்பு சாமிக்கு அரோகரா சொல்லவில்லை. எண்டாலும் முதல் முதல் ஒரு சுதந்திரக் குளியல் எனக்கு ஒரு மாதிரித்தான் இருந்தது.

அண்டைக்கு  போஸ்ட் கஷுவலிட்டி. இரவு 2 மணிக்கு படுத்து காலைமை எழும்பி அது வேற இப்பிடி ஒரு குளியல்.... வோட்டிலை கவின்கா கவனிச்சிட்டாள்- நான் ஒரு மாதிரி நிண்டதை. நிறைய குறும்புக்கார பெட்டை. நான்வேற அவளிண்டை போய் பிரண்டோட லவ்சீனை கூட இருந்த எல்லாருக்கும் உடைச்சிட்டன் எண்ட கோபமும் இருந்துதோ தெரியாது.

” குரு என்ன ஹொஸ்டலிலையே நிண்டனி?”

ஓமோம்

”அட கள்ளா சுதந்திர குளியல்தானே”...

அட படுபாவிகள்.யாரோ காலங்காத்தாலை வேலையில்லாம வந்து உதெல்லாம் சொல்லிப்போட்டாங்களே....

அதுசரி யார் உனக்குச் சொன்னது.

” ஒருத்தருமில்லை. நான் சும்மா கதை விட்டு கதையெடுத்தனான். ஹிஹி..”

அப்பு சாமிக்கு அரோகரா...

யாரோ பிலத்து கத்தினமாதிரி இருந்தது.


புதன், 15 ஏப்ரல், 2009

கொட்டேக்கை பிடிச்சன் எண்டா....


யாழ் இந்துக் கல்லூரிப் பெடியளுக்கு படிப்பிக்கிறதெண்டா அது ஒரு கலை பாருங்கோ. அதுதான் அந்தக் காலத்தில ஒருபொம்புள ரீச்சரும் அங்க படிப்பிக்க வாறேல்லை. நான் சொல்லுறது 1990- 1998 காலப்பகுதி. அப்ப எனக்குத் தெரிஞ்சு சங்கீதத் ரீச்சரும் அதுக்கு பிறகு 1991 அளவில வந்த பொட்னி ரீச்சரையும் தவிர வேறொருவரும் பொம்பிளை ரிச்சரில்லை. பிரின்சிபல் ஒபிசில இருந்த டைபிஸ்டை தவிர ஒபிசில கூட ஒரு பொம்பிளையளும் வேலை செய்யேல்லை.







சரி பொறுங்கோ

சொல்ல வந்த விசயத்தை விட்டிட்டு நான் வேற எங்கையோ சுத்திறன். ( படிக்கப்போறன் எண்டு சொல்லிப்போட்டு சுத்திப் பழகி இப்ப அந்தப் பழக்கம் விடுகுதில்லை)

படிப்பிக்கவே பயபபடும் இடத்தில உபஅதிபராக இருக்கிறதெண்டா சின்ன விசயமா?

இருந்து காட்டினவர்

எலியர்.

என்னடா ஆசிரியரை அதுவும் ஒரு உப அதிபரை பட்டப்பெயர் சொல்லிக் கூப்பிடுறானே எண்டு கோவிக்காதையுங்கோ. மகேந்திரன் சேர் எண்டு சொன்னா கனபேருக்கு அவரைத் தெரியாது. அதுதான்.

எலியர் நாங்கள் ஆறாம் ஆண்டில 1990 இல போய்ச் சேர்ந்தபோது எங்களளவு உயரத்தில இருந்தவர். நாங்கள் வகுப்பு ஏற ஏற வளர்ந்து கொண்டு போனனாங்கள். பாவம் அவர் உயரத்தில வளரேல்லை.

ஆனாலும் எலியர் வாறார் எண்டா உந்தப் புரளிகாரனும் அடங்கிவிடுவான். காரணம் அவர் முதுகுப்புறமாய் மறைத்து (?!) வைச்சிருக்கிற வால்தான். மன்னிக்கவும் பிரம்புதான். சவல் அடி கிடைக்கிற பயத்திலை எல்லாம் அடங்கியிடும்.
உப்பிடித்தான் ஒருநாள் அதிபர் அலுவலகத்திற்கு அருகிலுள்ள வகுக்கறைகளுக்கு விஜயம்(திக்விஜயம்) செய்துகொண்டிருந்த எலியரின்ர கண்ணிலை பொறி பறந்தது. அது ஆண்டு 11 படிக்கிற அண்ணைமாரின் வகுப்பறை. அதிலை சாப்பிட்டிட்டு எறிய ஒரு குப்பைவாளி வைக்கப்பட்டிருந்தது. சாப்பிட்ட மிச்சங்களை அதுக்குள்ள போடச்சொல்லி பெரிய டிரம் வைச்சிருந்தவர்.

எங்கடை பொடியள் சாப்பிட்டு விட்டு வகுப்பிலிருந்தே எறிய (அதுவும் என்னை மாதிரி இலக்காய் எறிய முடியாத பலபேர் அந்த வகுப்பிலை படிச்சிருக்கும் எண்டு நினைக்கிறன்) அந்த குப்பையெல்லாம் வாளிக்கு வெளியே சிதறிக்கிடந்நதது.

யாரடா வெளியில கொட்டினது

வகுப்பே மௌனம்.

கொட்டேக்க பிடிச்சனெண்டா.... பிறகு தெரியுந்தானே.....

வகுப்பே கொல் எண்டு சிரிச்சது.

பிறகு என்ன நடந்தது எண்டே கேக்கிறியள்.






ஒண்டா இரண்டா எண்ணுறதிற்கு?

முதுகு பழுத்துபோச்சு முழு வகுப்பிற்கும்.

விளங்காம நீங்களும் முழுசிறியளே....

மிச்சத்தை வெளியிலை கொட்டேக்கை பிடிச்சனெண்டா அடிப்பன் எண்டு அவர் சொல்ல வந்தது டைமிங்கில வேறமாதிரி ஆகி....
சரி விடுங்கோ இன்னும் விளங்கேல்லை யெண்டா

புதன், 18 மார்ச், 2009

18.03.2000

தலைப்பை பார்த்த உடனே இது என்ர பிறந்த நாளோ அல்லது அவளை முதல் முதல் கண்ட நாளோ இல்லை அல்லது அவவின்ர பிறந்தநாளோ ( ம். நிறைய குறும்பு உங்களுக்கு) எண்டு நினைச்சிடாதையுங்கோ. எனக்கு ஏதோ நேற்று நடந்த மாதிரிக் கிடக்கு. அண்டைக்குத்தான் நான் முதன்முதலிலை விமானம் ஏறினது. விமானம் எண்டா ஏதோ லண்டனுக்கு போற போயி்ங் அல்லது கனடாவுக்கு போன ஜெட் எண்டெல்லாம் கண்ட பாட்டுக்கு கற்பனையை அவிட்டு விட்டிட்டு கஸ்டப் படாதையுங்கோ. நானே சொல்லுறன். அதுபாருங்கோ எங்கடை யாழ்ப்பாணம் கொழும்பு பிளைட்தான். இப்ப விளங்கியிருக்கும் உங்களுக்கு - இது லண்டன் பிளைட்டை விட விசேசமானதெண்டு.

கொழும்புக்கு வாறதெண்டா தமிழனுக்கு எப்பவும் பிரச்சனைதான். எங்கடை அப்பு , முட்காவின்ர ( முட்கா யார் எண்டு உங்களுக்கு தெரியாது தானே- அது எங்கட அம்மா சாட்சாத் செல்வராணியே தான்.) இன்ர சிட்டி ரெயினிலை செகண்ட கிளாஸ் வாரண்டிலை அதிஷ்டம் கிடைச்சா சிலிபிறேற்று சீட்டிலை போன காலம் ஒண்டு இருந்தது எனக்கும் சாடையா ஞாபகம். ஆனாப் பாருங்கோ எனக்கு நினைவில நிக்கிறதெல்லாம் பாஸ் எடுத்து கொழும்பு போறதுதான். அதுவும் 1990 -1995 காலப்பகுதியெண்டா அவயிற்றையும் 1996 இலிருந்து இப்பவரை இவையிற்றையும் பாஸ் எடுத்தாதான் கொழும்பு போகலாம். அவையிவை யாரெண்டு தெரியாத ஆக்கள் பேசாமல் மூடிவைச்சிட்டு நித்திரையை கொள்ளுங்கோ. எனக்கு விசர் வந்திடும். நாட்டு நிலை தெரியாத நீஙகள் எல்லாம் மனிசரே? சரிசரி. ஏதோ என்ர வயித்தெரிச்சலிலை நானும் “வள்சுள்” எண்ணுறன் எண்டுட்டு கோபிச்சு கொண்டு போயிடாதையுங்கோ. உங்களை விட்டா எனக்கு வேற யார் இருக்கினம்?







அது ஒருபெரிய கதை பாருங்கோ. நான் கடைசியா கொழும்பு வந்தது 1989 இல.அப்ப வந்தது ரெயினிலை. அப்ப வந்து முந்தி நான் படிச்ச மூர் றோட்டு நேசரி, அப்பாவோட வேலை செய்த குசும் அன்ரி இப்பிடி கொஞ்ச ஞாபகங்களை புதுப்பிச்சு போட்டு போனதுதான். குசும் அன்ரியை என்னெண்டு நினைவு வச்சிந்தாய் எண்டு கேளாதையுங்கோ. பருப்பு திண்டா வாறதுக்கும் அவவின்ர பெயருக்கும் கிட்டத்தட்ட கனெக்சன் ஒண்டு இருக்கிறமாதிரி ஒரு ஹலுசினேசன்தான்.

1996 இல காங்கேசன்துறையிலை இருந்து திருகோணமலைக்கு தமிழ் தினத்துக்கு கப்பலிலை ( ஓசியிலதான்) போனது ஒரு பயணம். அதுக்குப்பிறகு 2000 இலதான் யாழ்ப்பாணத்தால குடிபெயர்ந்தது.



சரி வந்த விசயத்தை விட்டிட்டு...
1998 இல ஏ எல் பாஸ் பண்ணினாலும் 2000 ம் ஆண்டுவரை சும்மா றோட்டிலை திரிஞ்சதுதான் வேலை. ஏனெண்டா கம்பஸ் 2000 ம் ஆண்டு ஓகஸ்டு 21 தான் துவங்கினது. அப்ப என்னத்துக்கு உந்த மூதேவி மார்ச்சிலையே வெளிக்கிட்டது எண்டு நீங்கள் கேட்கக்கூடாது. பாஸுக்கு நான் ஜனவரியிலேயே அப்ளை பண்ணிப்போட்டன். ஏதோ கடவுள் புண்ணியத்திலை மிக விரைவாக (??!!) மார்ச்சிலையே கிடைத்துவிட்டது. பாஸ் எடுத்தா ஒருமாதத்துக்குள்ள வெளிக்கிட்டிட வேணும். இல்லாட்டா பேந்து புதுப் பாஸ் எடுக்க வேணும். தவிர இங்கிலிசு கோஸ் ஏப்ரலிலை துவங்கும் எண்டு யாரோ சொன்னதால மார்சிலையே வெளிக்கிட்டாச்சு.

பாஸ் எடுக்கிறதெண்டா அதுக்கு போம் இருக்கு. அதை நிரப்பி விதானையாரிட்டை சைன் வாங்கி ( அது வாங்கேக்கை குடும்ப காட் கொண்டு போகவேணும்) பிறகு ஏ ஜீ ஏ யிட்டை சைன் வாங்கி பிறகு உடுவில் காம்பிலை குடுக்கவேணும். அவன் பேநது கொக்குவில் காம் காரணுக்கு அனுப்ப அவங்கள் கிளியர் பண்ணி திரும்பி அனுப்புவாங்கள். அதுக்கு பிறகு பேப்ரிலை பெயர்வரும். அந்தப் பெரிய லிஸ்டிலை என்ர பேரை தடவிப்பிடிச்சு ( எப்பவரும் எண்டு தெரியாததால ஒவ்வொருநாளும் பேப்பர் வாங்கிப் பார்க்கோணும்) பிறகு நாலாம் குறுக்குத்தெருவுக்கு போகவேணும். அங்கைதான் டோக்கன் எடுக்கிறது. டோக்கன் கிடைச்சா கிட்டத்தட்ட விசா கிடைச்ச மாதிரித்தான். பிறகு டோக்கனை கொண்டு கிளியரண்ஸ் எடுக்கோணும். அந்த கிளியரண்சை கொடுத்தா ஒரு டேட்டிலை டிக்கட் போட்டு தருவினம். கையோட காசையும் கொண்டு போக வேணும். டிக்கட் எடுத்தா பிறகு பிளைட் ஷுவர்தான். எண்டாலும் பேப்பரை பார்க்கவேணும் பிளைட் நிப்பாட்டி போட்டாங்களோ இல்லை ஓடுதோ எண்டு.

எம்பெருமானின் அளப்பெரும் கருணையாலும் நாங்கள் செய்த பூர்வ ஜென்ம புண்ணியத்தாலும் பிளைட் கான்சல் ஆகேல்லை. 18ம் திகதி பிளைட்.

18.03.2000
அப்ப ஓடின பிளைட் லயன் எயார் எண்டு நினைக்கிறன். சரியா ஞாபகம் இல்லை.
செகண்ட் பிளைட்.

காலை 6மணி.
நாலாம் குறுக்குத் தெரு.
தெருச் செக்கிங்.(இராணுவம்)
பொடி செக்கிங்.

சிவில் அலுவலகம் - நாலாம் குறுக்குத்தெரு யாழ்ப்பாணம்.
மீண்டும் செக்கிங்.( மிரிடரி பொலிஸ்)

பஸ்சுக்கு காத்திருப்பு.
பஸ் வருகை.
செக்கிங் ( விமானப்படை)

பஸ் ஏறி தெல்லிப்பளை பயணம். (அப்ப தெல்லிப்பளைதான் பொயிண்டு- கப்பல் எண்டா என்ன பிளைட் எண்டா என்ன)

பஸ் மாற்றி ஏற்றப்படல். (யாழ்ப்பாண பஸ் தெல்லிப்பளைக்கு அங்கால போகாது)
ஸ்கொட்டுக்காக காத்திருப்பு ( ஸ்கொட் என்பது பாதுகாப்புக்காக பஸ்ஸை சுற்றி வரும்வாகனங்கள்.)

பஸ் எல்லாம் வெளியே பார்க்க முடியாதவாறு கறுப்படிச்ச கண்ணாடி. ஜன்னல் திறக்க முடியாது. பஸ்ஸில் ஏ சியோ பானோ இல்லை.

காலை 9 மணி
பலாலியை அடைதல். (வாழ்க்கையில் முதன்முதல் பலாலியில் கால்வைத்த நாள்)

காத்திருத்தல் காத்திருத்தல் காத்திருத்தல்.

பகல் 2 மணி
செக்கிங் முடிந்து உள்ளே போதல்.

பசி பசி பசி
அம்மா கட்டித்தந்த புட்டுப் பாசலை நானும் அப்பாவுமாக வெட்டல்.
பேச்சுத் துணைக்கு நிசாந்தன்.
நிஷாந்தன் யாரெண்டு தெரியாதென்ன. அவன்தான் மட்ஸிலை டிஸரிறிக் பெஸ்ட்.( மாவட்டத்திலை முதலாம் பிள்ளை எண்டு தமிழிலை சொல்லடா என் நீங்கள் குளறுவது எனக்கும் கேட்குது)

மாலை 3 மணி.
பிளைட்டுக்கு ஆக்களை எடுத்தல்.

மாலை 3.30 மணி
பிளைட் வெளிக்கிடல்.

மாலை 4.30 மணி
கட்டுநாய்ககாவை அடைதல் ( அப்ப இரத்மலானையிலை இறக்கிறதில்லை)

மாலை 5.00 மணி
அழகான ஏ சி ரூரிஸ்ட் பஸ்ஸில் ஏற்றப்படல்.
( இவ்வளவு நேரமும் வெயிலிலை காய்ந்து வேர்த்து விறுவிறுத்த எங்கடை உடம்பின்ர வாசம் எங்களுக்கே தெரியதொடங்கியது.)
இந்த கட்டுநாயக்கா கொழும்பு பயணத்திற்கு பிறிம்பா 75 ரூபா வாங்கினது வேற கதை.
எண்டாலும் ஏசி சொகுசு பஸ்ஸில் முதல் அனுபவம். அதுவும் கண்ணாடி கறுப்பில்லை. வெளியே பார்க்கமுடியும்.

பஸ் கொழும்பின் நரகமான டிரபிக்கில் சிக்கிக்கொண்டது.

மாலை 7.30.00
கொழும்பு றீகல் தியேட்டர் வாசலிலை இறக்கிவிடப்படல்.கவனிக்க தியேட்டர் வாசல்.
( இது லேக் ஹவுஸ் முன்னே உள்ளது.)

மாலை 7.30.01
முச்சக்கர வண்டி சாரதிகளால் சூழப்படல்.

ஒரு ஓட்டோ காறனிடம் அப்பா சிங்களத்தில்..

இந்த இடத்துக்குபோக எவ்வளவு...

ம். ஐயா நீங்கள் இப்ப நிக்கிறது கொழும்பு 02 (அதெண்டா உண்மைதான்) இது கொழும்பு 13 ( செக்கட்டித்தெரு) ஒரு 500 ரூபா தாங்கோ.

வேண்டாம். நாங்கள் நடந்தே போறம்.

ம். 25 நிமிடங்கள் நடந்து செக்கடித்தெருவுக்கு வந்துவிட்டோம்!!!!!

1995 இல 10 மைல் நடந்தே இடம்பெயர்ந்த எங்களிடமா?

ஹாஹாஹா

கொழும்பு பொல்லாத ஊர்தான் என்ன??????!!!!

18.03.2009