புதன், 30 ஏப்ரல், 2008

சைக்கிள் ஓட பழகிய கதை

எனக்கு ஆண்டு ஆறு படிக்கும் வரை சைக்கிள் ஓட தெரியாது என்பது அவமானத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று. அந்த வயதில் குஞ்சு குருமான் எல்லாம் பெரிய சைக்கிளை கூட பாருக்கால் கால் விட்டு ஒடக்கூடியதாக இருக்கையில் எனக்கு அரை சைக்கிள் வாங்கி தந்தும் ஒடதெரியாதது அவமானம் தானே? என்றாலும் பக்கத்து கோயிலில் சூடு விழுந்தான் பிள்ளையார் கோவிலில் பின் சீட்டை அப்பா பிடிக்க , தத்தி தத்தி சைக்கில் ஓட பழகியதை இன்றும் மறக்க முடியாது.

இது இப்படி இருக்க , ஒரு நாள் சைக்கிளில் தனியா போகும்போது சந்தியை கடக்கவேண்டி வந்தது . சைக்கிளை மிதிக்கவும் பிரேக் பிடிக்கவும் மட்டும் தெரிந்த எனக்கு போக்கு வரத்து விதிகள் எதுவும் தெரியாது. சந்தியை கடக்கும் போது முன்னாலே பிரதான வீதியில் ஒரு வயதான மருத்துவ மாது வந்துகொண்டிருந்தா . என்ன செய்வது என்று தெரியாததால் கண்களை இறுக்கி மூடிக்கொண்டேன் . டமால் என்று சத்தம் மட்டும் கேட்டது . நாங்கள் இருவரும் தெருவில் விழுந்து இருந்தோம். பிழை முழுதும் என் பக்கம் தான் என்றாலும் எனக்கு ஒன்று பேசாமல் என்னை தூக்கிவிட்டு தம்பிக்கு காயமா என கேட்ட அந்த அம்மாவை மறக்க முடியாது .

அதுசரி இங்கே கொழும்பிலே இன்னும் சைக்கில் பலன்சு பண்ணி ஓட தெரியாம இருந்த என் நண்பனை பார்க்கும் போது எனக்கு சந்தோசம். என்னை விட கீழேயும் ஒருவன் இருக்கிறான் !