வெள்ளி, 24 ஏப்ரல், 2009

அப்பு சாமிக்கு அரோகரா


அப்பு சாமிக்கு அரோகரா எண்ட உடனே முன்னாலையும் பின்னாலையும் பொத்திக்கொண்டு நீங்களுந்தான் சின்னப் பிள்ளையிலை ஓடியிருப்பியள். அதுவரை அம்மணமாக நின்றாலும் வராத வெட்கம் அப்பு சாமிக்கு அரோகரா எண்டதும் எங்கையிருந்து வாறதெண்டு எனக்கு இப்பவும் தெரியாது. அது மந்திரச் சொல் பாருங்கோ. இல்லாததையும் வரவழைக்கும்


சின்னஞ் சிறிசுகளுக்கு காற்சட்டை போடப் பிடிக்காது. எனக்குந்தான். ஆனா உஞ்சு வந்து கௌவிப்போடும் எண்டு பயமுறுத்தினா உடனே போட்டக் கொள்ளுறது. ஒருநாள் இப்பிடித்தான் பூனைக்குட்டியோட விளையாடிக் கொண்டிருக்கேக்கை அது கையிலை விறாண்டிப்போட்டுது. எரிஞ்ச எரிவெண்டா. நல்லவேளை அண்டைக்கு காற்சட்டை போட்டிருந்தன். ஆனா அண்டையிலை இருந்து பூனை எலி கரப்பொத்தான் எல்லாத்துக்கும் பயந்து காற்சட்டை போட்டுக்கொண்டுதான் இருக்கிறது. எங்கடை வீட்டுக்கு பக்கத்திலை பிள்ளையார் கோயிலிலை வைரவர் நாயோட நிண்டார். துணிஞ்ச கட்டைதான் உஞ்சுவுக்கே உந்தாள் பயப்பிடவில்லையெண்டா......

தமிழாக்கள் தெய்வ சிந்தனை கூடின ஆக்கள் க்ண்டியளோ. சேம் சேம் பப்பி சேம் எண்டு கத்தாம அப்பு சாமியை நினைக்கிற அந்தச்சனத்தை போல முன்னேற்றமான சிந்தனையை நான் வேற எங்கையும்  காணேல்லை. இது மட்டுமே கோயில் அடிக்கிற கண்டா மணிக்கு றைமிங்காக ...........மணி எண்டு பேர்வைச்ச தமிழனை... மாலைபோட்டு கும்பிடவேணும். குஞசு எண்டால் சின்னன் எண்டு அர்த்தமாம்.


நாங்கள் ஆண்டு 5 மட்டும் படிச்சது கலவன் பாடசாலை. பள்ளிக் கூடம் எண்டா எங்களுக்கு படிப்புதானே சிந்தனை. அரிவரியிலை சொல்லித்தந்ததெல்லாம் வந்து பாத்றூமிலை தான் சுவத்திலை எழுதுறது. பென்சில் பிடிச்சு எழுதுறதை விட கஷ்டமான வேலை பாருங்கோ. நல்லா வயிறு முட்டியிருந்தால் தான் ஆவன்னா இனா ஐயன்னா எழுதலாம். அல்லாட்டா அரைவாசியிலை இங்க் முடிஞ்சிடும். இஞ்சை கொழும்பை மாதிரி டைல்ஸ் போட்டு யூரின் கொமட் எல்லாம் கட்டியிருக்காது. முழுச்சுவரும் எங்களுக்குத்தான். கோசலை ரீச்சர் கூட எங்களுக்கு அடிக்கிறது இல்லை. ஒருவேளை இந்த விசயம் அவவுக்கு தெரியாதோ அல்லது உள்ளுக்கை போக பஞ்சியிலை வாசலிலை அடிச்சுப்போட்டு வாற பெடியளை விட நாங்கள் பறவாயில்லை எண்டு நினைச்சாவோ தெரியாது. எங்கடை பெட்டையளை நினைக்க பாவமா இருக்கும். ஒரு ஆனா ஆவன்னா எழுத வக்கில்லாததுகள் எப்பிடி அரிச்சுவடி யாஸ் பண்ணப் போகுதுகள் எண்டு பரிதாபப் படுறதுதான். எது எப்பிடியிருந்தாலும் கொக்குவில் சந்தியின் மேற்குப் பகுதி நாற அங்கையிருந்த மீன் சந்தை காரணம் எண்டா, சந்தியின் கிழக்குப் பகுதி நாற எங்கடை சுவர்ச் சித்திரங்களதான் காரணம்.

உப்பிடித்தான் ஒரு பெடியன் சித்திரம் வரைஞ்சு போட்டு சிப்பை மூட மறந்து வகுப்புக்கை வந்திட்டான். அதை மற்றவன் கண்டு அரோகரா என்ன.... அதை எல்லாப் பெட்டையளும் பார்க்க.. எங்கட வகுப்பு ஆண் குலத்துக்கே அண்டு கரிநாள்.




இப்பிடி வளந்ததால குளிக்கேக்கை கூட நான் வலுங்கவனம். ஆராவது பார்த்து அப்பு சாமி எண்டா என்னாகிறது. வளந்து பெரிசான பிறகும் இந்தக் கூச்சம் மாற இல்லை.

கம்பஸ் வந்தாச்சு. ராகிங் அது இது எண்டு எதுவுமே இல்லை. புல்லரித்தது. இல்லாட்டா என்ன கூத்தெல்லாம் ஆட வேண்டி வந்திருக்கும்.

சீ வி எஸ் மொடியுல் முடியும்வரை ஹொஸ்டல் ரூம் கிடைக்கவில்லை. அந்தக் காலத்தில் ஸ்பெசல் கோட்டா ஒண்டும் இல்லாததால திவா அண்ணை ரூமிலைதான் கஷுவல்ரி நாளிலை படுக்கிறது. காலமை எழும்பி குளிக்கப்போனா.... பாத்றூமுகள் ஒண்டுக்கும் கதவில்லை. ஒவ்வொரு ஷவருக்கு கீழையும் ஒவ்வொரு வயிரவ கடவுள்கள் குளிச்சுக் கொண்டிருந்தார்கள்.  வாற ஒவ்வொருத்தரும் கட்டியிருந்த டவலை கழட்டி தணிலை போட்டுட்டு குளிச்சுக் கொண்டிருந்தார்கள். அட இந்த ஊரிலை இதுதானோ வழக்கம்? நானும் டவலை கழட்டி தூணிலை போட்டிட்டு குளிச்சாச்சு. நல்லவேளை யாரும் அப்பு சாமிக்கு அரோகரா சொல்லவில்லை. எண்டாலும் முதல் முதல் ஒரு சுதந்திரக் குளியல் எனக்கு ஒரு மாதிரித்தான் இருந்தது.

அண்டைக்கு  போஸ்ட் கஷுவலிட்டி. இரவு 2 மணிக்கு படுத்து காலைமை எழும்பி அது வேற இப்பிடி ஒரு குளியல்.... வோட்டிலை கவின்கா கவனிச்சிட்டாள்- நான் ஒரு மாதிரி நிண்டதை. நிறைய குறும்புக்கார பெட்டை. நான்வேற அவளிண்டை போய் பிரண்டோட லவ்சீனை கூட இருந்த எல்லாருக்கும் உடைச்சிட்டன் எண்ட கோபமும் இருந்துதோ தெரியாது.

” குரு என்ன ஹொஸ்டலிலையே நிண்டனி?”

ஓமோம்

”அட கள்ளா சுதந்திர குளியல்தானே”...

அட படுபாவிகள்.யாரோ காலங்காத்தாலை வேலையில்லாம வந்து உதெல்லாம் சொல்லிப்போட்டாங்களே....

அதுசரி யார் உனக்குச் சொன்னது.

” ஒருத்தருமில்லை. நான் சும்மா கதை விட்டு கதையெடுத்தனான். ஹிஹி..”

அப்பு சாமிக்கு அரோகரா...

யாரோ பிலத்து கத்தினமாதிரி இருந்தது.