செவ்வாய், 22 ஜூலை, 2008

உலக சுகாதார தினம் 2006



உலக சுகாதார ஸ்தாபனத்தில் வேலை செய்த காலத்தில் உலக சுகாதார தினம் கொழும்பு இன்ரகொன்டினண்ட் ஓட்டலில் கொண்டாடப்பட்டது. அதில் எடுக்கப்பட்ட படங்கள் தான் இவை!

செவ்வாய், 15 ஜூலை, 2008

மறக்க முடியாத நினைவுகள்

படிச்ச இடத்திலே பணிபுரிவது ஒரு அலாதியான அனுபவம் . அது enathu பல்கலை கழகத்திலும் கிடைத்தது. டெமோ ஆகி பணி புரிந்த எல்லாரையும் சேர்த்து படம் எடுக்க என்னை விட்டார்கள். வாங்கடா எட்டுமணிக்கு என்றால் ஒன்று எட்டு மணிக்கும் ஒன்று ஒன்பது மணிக்கும் வரும் . இந்த கரைச்சலை எல்லாம் தாண்டி ஒரு மாதிரி பத்து மணிக்கு படம் எடுத்து முடிச்சாச்சு !

ரை கட்டும் சுரஞ்ச , சூ லேஸ் கட்டும் சுரங்க , பார்த்து சிரிப்பது கவிங்கா .



ஏக்கம் மிகுந்த இனிய நினைவுகள்





இந்தப் படங்கள் எங்கே எடுக்கப் பட்டது என தெரியுமா ?



முறி கண்டியை மறந்து இருக்க மாட்டியள் தானே?



இப்ப சொல்லுங்க 9 திறக்குமா என்ற ஏக்கம் உங்களுக்கும் இருக்கு தானே?

சட்டி சுட்டாலும் கை விடாது!

தோசை சுடுவமா ?


சாப்பிட தயாரான நிலையில் நெய்த் தோசை

சமையல் செய்வது என்பது ஆண்களுக்கு ஒரு பெரிய விடயமல்ல. வெளி நாடுகளில் இருக்கும் நண்பர்கள் சமைத்து ஒரு கிழமை சாப்பாடை குளிரூட்டியில் வைக்கும் கதை நாமறிந்தது.



ஆனாலும் சமையல் என்பது அலுப்பு பிடிச்ச விடயம் தான்.

சரி நாமும் தான் சமைச்சு பாப்பமே என வெளிக்கிட்ட எனது கதை இது. சட்டி சுட்டாலும் இன்னும் கை விட வில்லை ( சமையலை)

செவ்வாய், 8 ஜூலை, 2008

எமது இரத்த வங்கி

காலை கடமையில் இருந்த எனது ஆளணியினர்
களைச்சுப் போனிங்கள் டாக்டர் , Anchor குடியுங்கள்
அடுத்த வருசமும் வரவேணும் என்ன?


வெள்ளி, 4 ஜூலை, 2008

கந்தான மலை பயணம்

எமது பல்கலை கழகத்துக்கு ஒரு மரபு உள்ளது . ஒரு புது அணி உருவானதும் அதன் முதல் சுற்றுலா கந்தான மலை ( கண்டி) ஏறுவதுதான் . எமது மருத்துவ பீட அணியும் கந்தான மலை ஏறியது. அந்த சுற்றுலாவில் வழமையாக யாரவது வழி மாறி போவது உட்பட பல கலாட்டாக்கள் நடக்கும். பல புது சோடிகள் உருவாவதும் அங்கு தான். நல்ல வேலையாக எமது அணியில் யாரும் மலையில் தொலைய வில்லை . ஆனாலும் என்ன, போன மூன்று பஸ் களில் எமது பஸ் முன் லைட் எரியாது . அட கடவுளே , பின்னால் வந்த பஸ் இன் உதவியுடன் மலை இறங்கி வர வேண்டியதாய் ஆயிற்று. faculty வந்து சேரும் போது இரவு பதினோரு மணி என்று ஞாபகம் .

கந்தான மலை உச்சியில் உள்ள தொலை தொடர்பு கோபுரம்

மலை ஏறிய தமிழ் மாணவர் அணி

திங்கள், 30 ஜூன், 2008

கனவு நனவாகும் காலம் !

ஒரு மோட்டார் சைக்கிளை வாங்கி சுத்திதிரியுறது எண்டா பொடியளுக்கு சந்தோஷம் தான். சைக்கிளே ஓடத் தெரியாத வயதில் யாருடைய வண்டியிலாவது ஏறி படம் எடுப்பது பொழுது போக்கு !
இரவல் பைக் இல் ஏறி இருந்த சந்தோஷம்

சொந்தக் காசில் வாங்கிய பைக்

அறை எண் 78 இல் கடவுள்

அறை எண் 305 இல் கடவுள் படத்தை நீங்கள் பார்த்திருக்க கூடும். எங்களது பல்கலை கழக வாழ்க்கையில் விடுதி வாழ்க்கை மறக்க முடியாதது. அதுவும் முதன் முதலாக கிடைத்த அறை எண் 78 . அதில் நானும் ரூம் மேட் இநோஷானும் பட்ட அவலங்கள் கொஞ்சம் இல்லை என்றாலும் எமது விடுதி வாழ்கை சந்தோசமாகவே கழிந்தது .

ஒரு பிரமச்சாரியின் அறை


அலுப்படிக்குது !

யாழ் இந்து மேலை தேய வாத்திய குழு

யாழ் இந்து கலூரிக்கு பல சிறப்புகள் இருந்தாலும் அந்தக் காலத்தில் இருந்த வெஸ்டர்ன் பேண்ட் ட்ரூப் பிரபலமானது . அந்தக் காலத்தில் yamaka இசை உபகரணங்களுடன் இருந்த ஒரே ஒரு பாடசாலை யாழ் இந்து தான் . ஒவ்வொரு வருடமும் விளையாட்டுப்போட்டியில் தான் புதிய band majar உடன் புதிய அணி களம் இறங்கும்.

மேஜர் தவபாலன் உடன் எமது அணி


அட்சரம் பிசகாத அணி வகுப்பு


leep forward நடவடிக்கைக்கு முதல் நாள் எமது விளை யாட்டுப் போட்டி


இது அந்த நாள் ஞாபகம்


செவ்வாய், 17 ஜூன், 2008

சொன்னா வெட்ககேடு சொல்லாட்டா மானக்கேடு !




ஒரு நிறுவனத்துக்கு பொறுப்பு அதிகாரியா வாறதெண்டால் ஒரு பெரிய விசயந்தான் . ஆனாலும் ஒருத்தரும் இல்லாத கட்டத்தில் பதவி கீழ உள்ளவர்களுக்கு கிடைக்கிறது என்றால் அது ஒரு கேலிக் கூத்து ! ஆலை இல்லா ஊருக்கு இலுப்பை பூ சக்கரை (சர்க்கரை )


ஆனாலும் என்ன கீழே உள்ளவனுக்கு இரத்த வங்கியின் பொறுப்பு கிடைத்தது
இரத்த தானம் செய்யும் கொடையாளர் தினம் வந்த போது சிறிய விழா கொண்டாடப் பட்டது .

ஏதோ என்னால இயண்டது இது என்று செய்த விழாவின் படங்கள் கீழே




ஒன்பது மணிக்கு லேட் ஆக வந்த அதிகாரி !




போஸ்டர் ஒட்டவும் நாங்களே போகவேணும்!



செஞ்சிலுவை சங்க உதவி



என் கூட வேலை செய்பவ !




எல்லாம் நடந்தது 14.06.2008 அன்று !







செவ்வாய், 10 ஜூன், 2008

மருத்துவ பீட சுற்றுலா

மருத்துவ பீட சுற்றுலா

கொழும்பு மருத்துவ பீடத்தில் படித்த ( அல்லது படிக்கிற மாதிரி நடித்த ) ஐந்து வருடங்களில் கிடைத்த ஒரு சந்தர்ப்பம் தான் இந்த பேருவளை சுற்றுலா.
பீடத்தில் படிக்கும் அனைத்து மாணவர்களும் ஒரு புகைவண்டி பிடித்து அந்த விசேட வண்டியில் கடற்கரைக்கு போகும் அனுபவம் மறக்க முடியாதது!
இந்த காலத்தை போல் பயணம் என்றால் குண்டின் பயம் இன்றி போன நந்தவன நாட்கள் அவை!

இந்த படங்கள் நண்பன் தினேஷின் பேனை புகைப்பட கருவியால் பிடிக்கப்பட்டவை .




சீனியர் கலை சாப்பாட்டு பொதியுடன்!


திரும் ப போக வண்டி வருமா என் ஏங்கும் புது முக பிரிவு ( அது அப்ப)

தலைவர் என்றால் இப்படித்தான் !

தலைவராக முன்னர் அருணன் திருக் கேதீச்வரம் போனபோது நள்ளிரவில் நடந்தது ! ( எத்தனையாவது முறை குடிக்கிறார் என கேட்க கூடாது! )





தலைவர் ஆனா பிறகு கனக்க தரம் குடுக்க வேணாம் எனும்போது !


தலைவர் என்றால் இப்படித்தான் !

வியாழன், 8 மே, 2008

மலையும் பள்ளத்தாக்கும் !










இரண்டு மலை

இடையில் பள்ளத்தாக்கு

ஒரு மலையில் என் வேலைத் தளம்

மறு மலையில் என் குடியிருப்பு

இரண்டு மலைகளிலும் மேக முந்தானைகள்

பள்ளத்தாக்கின் ஊடாக என் பாதை

இப்படித் தான் எழுதவேண்டி வரும் என் இருப்பிடம் பற்றி சொன்னால்

என்றாலும் இன்னும் இரட்டை அர்த்தத்தில் கவி சொல்வதாக அவள் கோவிக்க கூடும்

படத்தை பாருங்கள் நான் சொன்னது உண்மை என புரியும்







செவ்வாய், 6 மே, 2008

மடுவுக்கு போன மனிதர்கள்

இந்த படத்தைப் பார்த்திட்டு ஏதோ இந்த வெங்காயங்கள் போய் மடுவை பிடிசிடுதுகள் என்று தவறாக எண்ண வேண்டாம் .இது சிவராத்திரிக்கு திருகேதீச்வரம் போகேக்கை மடுவுக்கும் போய் எடுத்த படம் . 2005 ஆம் ஆண்டு எடுத்த படம். கொழும்பு பல்கலை கழக தமிழ் மன்றம் ஏற்பாடு செய்த பயணம் அது !

மருத்துவ பீடத்தால் போன மருத்துவ மாணவர்கள்

பயணம் செய்த பஸ் . என்ன பகிடி என்றால் இந்த இரண்டு பஸ் உம் மடு வர முடியவில்லை. பாதை பயண அனுமதி இல்லாததால் இவை இரண்டும் உள்ளே செல்ல படையினரால் அனுமதி மறுக்கப்பட்டது . எனவே மூன்றாவதாக பிடித்த பஸ் இனுள் மூன்று பஸ் சனத்தையும் அடைத்து போன பயணம் மறக்க முடியாதது !

புதன், 30 ஏப்ரல், 2008

சைக்கிள் ஓட பழகிய கதை

எனக்கு ஆண்டு ஆறு படிக்கும் வரை சைக்கிள் ஓட தெரியாது என்பது அவமானத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று. அந்த வயதில் குஞ்சு குருமான் எல்லாம் பெரிய சைக்கிளை கூட பாருக்கால் கால் விட்டு ஒடக்கூடியதாக இருக்கையில் எனக்கு அரை சைக்கிள் வாங்கி தந்தும் ஒடதெரியாதது அவமானம் தானே? என்றாலும் பக்கத்து கோயிலில் சூடு விழுந்தான் பிள்ளையார் கோவிலில் பின் சீட்டை அப்பா பிடிக்க , தத்தி தத்தி சைக்கில் ஓட பழகியதை இன்றும் மறக்க முடியாது.

இது இப்படி இருக்க , ஒரு நாள் சைக்கிளில் தனியா போகும்போது சந்தியை கடக்கவேண்டி வந்தது . சைக்கிளை மிதிக்கவும் பிரேக் பிடிக்கவும் மட்டும் தெரிந்த எனக்கு போக்கு வரத்து விதிகள் எதுவும் தெரியாது. சந்தியை கடக்கும் போது முன்னாலே பிரதான வீதியில் ஒரு வயதான மருத்துவ மாது வந்துகொண்டிருந்தா . என்ன செய்வது என்று தெரியாததால் கண்களை இறுக்கி மூடிக்கொண்டேன் . டமால் என்று சத்தம் மட்டும் கேட்டது . நாங்கள் இருவரும் தெருவில் விழுந்து இருந்தோம். பிழை முழுதும் என் பக்கம் தான் என்றாலும் எனக்கு ஒன்று பேசாமல் என்னை தூக்கிவிட்டு தம்பிக்கு காயமா என கேட்ட அந்த அம்மாவை மறக்க முடியாது .

அதுசரி இங்கே கொழும்பிலே இன்னும் சைக்கில் பலன்சு பண்ணி ஓட தெரியாம இருந்த என் நண்பனை பார்க்கும் போது எனக்கு சந்தோசம். என்னை விட கீழேயும் ஒருவன் இருக்கிறான் !

சனி, 19 ஏப்ரல், 2008

வாயுபுத்திரன் என்ற பெயரின் பின்னணி

நிறைய பேருக்கு இப்பவும் தெரியாது ஏன் வாயுபுத்திரன் என்ற பெயர் வைத்தனான் என்று. உண்மையில் அது எண்டமூரி வீரேந்திர நாத் என்ற ஒரு எழுத்தாளரின் கண் சிமிட்டும் விண் மீன்கள் என்ற நாவலின் கதா பாத்திரம் தான் அது. என்ன பகிடி என்றால் அந்த நாவலின் கதை முழுவதும் இப்ப ஞாபகம் இல்லை. ஆனாலும் அந்த கதையில் வரும் பிளக் ஹோல் என்பன இப்பவும் நல்ல நினைவு. ஆண்டு ஏழில் படித்த கதை ஆண்டு ஒன்பதில் புனை பெயர் வைக்க உதவியது.

வெள்ளி, 4 ஏப்ரல், 2008

என்ன இருக்கு உள்ளே ?

எனக்கு தெரியும்

தலைப்பை பார்த்த உடனே உள்ளுக்கை பூந்து பார்க்கிற வழக்கம் என்னை போலவே உங்களுக்கும் இருக்கும் என்று. கொஞ்சம் பொறுங்கோ .

எல்லாம் வெளியில வரும்!