வியாழன், 8 மே, 2008

மலையும் பள்ளத்தாக்கும் !










இரண்டு மலை

இடையில் பள்ளத்தாக்கு

ஒரு மலையில் என் வேலைத் தளம்

மறு மலையில் என் குடியிருப்பு

இரண்டு மலைகளிலும் மேக முந்தானைகள்

பள்ளத்தாக்கின் ஊடாக என் பாதை

இப்படித் தான் எழுதவேண்டி வரும் என் இருப்பிடம் பற்றி சொன்னால்

என்றாலும் இன்னும் இரட்டை அர்த்தத்தில் கவி சொல்வதாக அவள் கோவிக்க கூடும்

படத்தை பாருங்கள் நான் சொன்னது உண்மை என புரியும்







செவ்வாய், 6 மே, 2008

மடுவுக்கு போன மனிதர்கள்

இந்த படத்தைப் பார்த்திட்டு ஏதோ இந்த வெங்காயங்கள் போய் மடுவை பிடிசிடுதுகள் என்று தவறாக எண்ண வேண்டாம் .இது சிவராத்திரிக்கு திருகேதீச்வரம் போகேக்கை மடுவுக்கும் போய் எடுத்த படம் . 2005 ஆம் ஆண்டு எடுத்த படம். கொழும்பு பல்கலை கழக தமிழ் மன்றம் ஏற்பாடு செய்த பயணம் அது !

மருத்துவ பீடத்தால் போன மருத்துவ மாணவர்கள்

பயணம் செய்த பஸ் . என்ன பகிடி என்றால் இந்த இரண்டு பஸ் உம் மடு வர முடியவில்லை. பாதை பயண அனுமதி இல்லாததால் இவை இரண்டும் உள்ளே செல்ல படையினரால் அனுமதி மறுக்கப்பட்டது . எனவே மூன்றாவதாக பிடித்த பஸ் இனுள் மூன்று பஸ் சனத்தையும் அடைத்து போன பயணம் மறக்க முடியாதது !