புதன், 15 ஏப்ரல், 2009

கொட்டேக்கை பிடிச்சன் எண்டா....


யாழ் இந்துக் கல்லூரிப் பெடியளுக்கு படிப்பிக்கிறதெண்டா அது ஒரு கலை பாருங்கோ. அதுதான் அந்தக் காலத்தில ஒருபொம்புள ரீச்சரும் அங்க படிப்பிக்க வாறேல்லை. நான் சொல்லுறது 1990- 1998 காலப்பகுதி. அப்ப எனக்குத் தெரிஞ்சு சங்கீதத் ரீச்சரும் அதுக்கு பிறகு 1991 அளவில வந்த பொட்னி ரீச்சரையும் தவிர வேறொருவரும் பொம்பிளை ரிச்சரில்லை. பிரின்சிபல் ஒபிசில இருந்த டைபிஸ்டை தவிர ஒபிசில கூட ஒரு பொம்பிளையளும் வேலை செய்யேல்லை.







சரி பொறுங்கோ

சொல்ல வந்த விசயத்தை விட்டிட்டு நான் வேற எங்கையோ சுத்திறன். ( படிக்கப்போறன் எண்டு சொல்லிப்போட்டு சுத்திப் பழகி இப்ப அந்தப் பழக்கம் விடுகுதில்லை)

படிப்பிக்கவே பயபபடும் இடத்தில உபஅதிபராக இருக்கிறதெண்டா சின்ன விசயமா?

இருந்து காட்டினவர்

எலியர்.

என்னடா ஆசிரியரை அதுவும் ஒரு உப அதிபரை பட்டப்பெயர் சொல்லிக் கூப்பிடுறானே எண்டு கோவிக்காதையுங்கோ. மகேந்திரன் சேர் எண்டு சொன்னா கனபேருக்கு அவரைத் தெரியாது. அதுதான்.

எலியர் நாங்கள் ஆறாம் ஆண்டில 1990 இல போய்ச் சேர்ந்தபோது எங்களளவு உயரத்தில இருந்தவர். நாங்கள் வகுப்பு ஏற ஏற வளர்ந்து கொண்டு போனனாங்கள். பாவம் அவர் உயரத்தில வளரேல்லை.

ஆனாலும் எலியர் வாறார் எண்டா உந்தப் புரளிகாரனும் அடங்கிவிடுவான். காரணம் அவர் முதுகுப்புறமாய் மறைத்து (?!) வைச்சிருக்கிற வால்தான். மன்னிக்கவும் பிரம்புதான். சவல் அடி கிடைக்கிற பயத்திலை எல்லாம் அடங்கியிடும்.
உப்பிடித்தான் ஒருநாள் அதிபர் அலுவலகத்திற்கு அருகிலுள்ள வகுக்கறைகளுக்கு விஜயம்(திக்விஜயம்) செய்துகொண்டிருந்த எலியரின்ர கண்ணிலை பொறி பறந்தது. அது ஆண்டு 11 படிக்கிற அண்ணைமாரின் வகுப்பறை. அதிலை சாப்பிட்டிட்டு எறிய ஒரு குப்பைவாளி வைக்கப்பட்டிருந்தது. சாப்பிட்ட மிச்சங்களை அதுக்குள்ள போடச்சொல்லி பெரிய டிரம் வைச்சிருந்தவர்.

எங்கடை பொடியள் சாப்பிட்டு விட்டு வகுப்பிலிருந்தே எறிய (அதுவும் என்னை மாதிரி இலக்காய் எறிய முடியாத பலபேர் அந்த வகுப்பிலை படிச்சிருக்கும் எண்டு நினைக்கிறன்) அந்த குப்பையெல்லாம் வாளிக்கு வெளியே சிதறிக்கிடந்நதது.

யாரடா வெளியில கொட்டினது

வகுப்பே மௌனம்.

கொட்டேக்க பிடிச்சனெண்டா.... பிறகு தெரியுந்தானே.....

வகுப்பே கொல் எண்டு சிரிச்சது.

பிறகு என்ன நடந்தது எண்டே கேக்கிறியள்.






ஒண்டா இரண்டா எண்ணுறதிற்கு?

முதுகு பழுத்துபோச்சு முழு வகுப்பிற்கும்.

விளங்காம நீங்களும் முழுசிறியளே....

மிச்சத்தை வெளியிலை கொட்டேக்கை பிடிச்சனெண்டா அடிப்பன் எண்டு அவர் சொல்ல வந்தது டைமிங்கில வேறமாதிரி ஆகி....
சரி விடுங்கோ இன்னும் விளங்கேல்லை யெண்டா