வியாழன், 21 மே, 2009

லீவும் கல்யாணவீடும்.

கலியாணவீட்டுக்கு போகோனும். அதுவும் ஐஞ்சு வருசமாய் எங்களோட படிச்சதின்ர கலியாணவீடு. அஞ்சு வருசமாய் அவையள் படிச்சிருக்கலாம் ஆனா நீ படிச்சனியோ எனக் கேட்டு என்ர அடி மடியிலை கை வைக்கக் கூடாது. கலியாணவீடெண்டா சும்மா இல்லை. லீவு எடுக்கிறதெண்டா கூட வேலை செய்யுறவன் ஒவ்வொருத்தனும் ஏதோ எதிரியை பார்க்கிற மாதிரிப் பார்ப்பான். பின்னை சும்மாவே. கவர் அப்புகுக்கு சைன் வைச்சவன் தானே நிண்டு வேலைக்கு முறியோணும். அது வேற இப்ப டெங்கு காய்ச்சல் டைம். வேலை சொல்லி மாளாது. எண்டாலும் ஒரு சாக்குப் போக்கும் சொல்லேலாது. ஒரு மாததுக்கு முன்னமே காட் கிடைச்சிட்டுது. இப்பபோய் லீவு இல்லை எண்டு சொன்னா கற்பூரம் அணைச்சு சத்தியம் பண்ணினாலும் நம்பாதுகள். 

19ம் திகதியும் ஆச்சு இன்னும் லீவு போட இல்லை. நாட்டிலை வேற நடக்கிறதுகள் அவ்வளவு நல்லாத் தெரியேல்லை. உந்த லட்சணத்திலை கலியாணவீடாவது ....

மததியானம் எஸ் எம் எஸ் வந்தது. நாளைக்கு பொது விடுமுறையாம். ஆனாலும் மனது சந்தோசமாய் இல்லை.எதப் பிரச்சனை தீராட்டாலும் ஏதோ ஒரு வழியா லீவுப் பிரச்சனை தீர்ந்ததே. சரியொருக்கா போட்டு வருவம் எண்டு நினைக்க மழை ஊத்தத் தொடங்கியது. மழையெண்டா மோட்டர் பைக் ஓடுறது கஸ்டம். பைக் எண்டா ஒள்றரை மணித்தியாலத்திலை போய்ச் சேரலாம். பஸ் என்டா அது ஆடிஆடி போறதுக்கிடையிலை தாலிகட்டு முடிஞ்சிடும். பஸ்வேற ஓடுமோ தெரியாது... வெள்ளன வெளிpக்கிடுற அவசரத்திலை காலமை சமைக்கவும் இல்லை. ரீ போடவும் இல்லை. எல்லாம் போய் கொழும்பிலை பார்ப்பம்.

கேகாலையிலை இருந்து கொழும்புக்கு டிரெக்ட் பஸ் இருக்கு. கொழும்பு கண்டி றோட்டுத்தானே. கண்டி பஸஸிலும் ஏறலாம். 





பஸ் ஸ்டாண்டுக்கு போனா பஸ் நிற்குது ஆனா ஓடாதாம். என்னடாப்பா இது விடுமுறையோ இல்லை ஹர்த்தாலோ? விடுமுறை எண்டா சாப்பாட்டுக் கடை மருந்துக்கடை திறக்கவேணும். போயா எண்டா பார் பூட்டவேணும். பஸ் ஓட வேணும்.

ஏதோ ஒருமாதிரி வந்த கண்டி பஸ்ஸில் தொற்றிக் கொண்டேன். அப்பிடியே பெற்றா போய் அங்கையிருந்து வெள்ளவத்தை போறதுதான் திட்டம். நல்லசேளை பெற்றாவிலை பஸ் நிண்டது. ஆனா சாப்பாட்டு கடையளும் மற்றக் கடையளும் பூட்டு.

சரியெண்டு வெள்ளவத்தைக்கு போனா. அடப்பாவமே. அஙகையும் கடை பூட்டு. யார்யாரோ கத்திக்கொண்டு ஆர்ப்பாட்ட ஊர்வலம் போண்க்கொண்டிருந்தாங்கள்.

எனக்கோ சரியான தண்ணிவிடாய். காலமை ரீ வேற குடிக்கேல்லை. பியர்கடை வைன் சொப் மட்டும் திறந்திருக்கு.

போன் கீச் கீச் எண்டது. 

என்னடா?

விசயம் தெரியுமே ? ஆள் அதுக்கை இல்லையாம்.

தண்ணிவிடாய்க்கு ஒரு மிடறு அடிச்சிட்டு போனாலும் பறவாயில்லை மாதிரி சந்தோசமாய் இருந்தது.

நீங்கள் சொல்லுங்கோ..

இது விடுமுறைபோ ஹர்த்தாலோ???

20.05.2009


2 கருத்துகள்:

கிடுகுவேலி சொன்னது…

இது ஹர்த்தால்தான் பாருங்கோ..! விட்டுட்டோம் எண்ட கவலையில நடந்தது. கலியாணக் காட்சி கண்டியளோ...?

கிருஷ்ணபிள்ளை குருபரன் சொன்னது…

ஹிஹிஹி
லீவு விட்டதிலை கூப்பிட்ட எல்லாச் சனமும் வந்தாக்கும், ஒரே சனம்.
கடைசியா அகதிமுகாமிலை லைனிலை நிண்டு சாப்பிட்ட மாதிரி சாப்பிட்டம்.