புதன், 13 மே, 2009

வடையும் எஸ் எம் எஸ் உம்.


எங்கடை நாட்டிலை டெலிபோன் கொம்பனிகள் நல்லா உழைச்சுக் கொட்டினதுக்கு ஒரு காரணம் காதலர் பெருந்தகையள் எண்டா நீங்கள் கட்டாயம் ஒப்புப் கொண்டுதான் ஆகவேண்டும். மணித்தியாலக் கணக்கா காதுக்கை போனை ஓட்டி வைச்சு கதை கதை எண்டு கதைச்சு பில்லை சந்திர மண்டலம் மட்டும் ஏற்றி வைக்கிற பெருந்தகையள் அதுகள் தான். அதுசரி இப்பிடி யாரும் மணிக்கணக்கில அலம்புறதுக்கு கிடைக்காத பூத்தெரிச்சலிலை நான் புலம்புறதெண்டு சொன்னாலும் நான் அதை கணக்கிலை எடுக்க மாட்டன். 


ஆனாலும் பாருங்கோ இப்பிடி காதலிச்சுக் கொண்டிருக்கிற ஆக்களோட திரிஞ்சால் நிறைய விசயம் அறியலாம். எந்த ரியூசனுக்கு போனாலும் வெளிக்காத விசயங்கள் இவையளோட நடவடிக்கையால தெரியவரும். நானும் நிறைய பேரைக் கண்ட அனுபவத்தை உங்கேளோடை கதைக்காட்டா என்ர தலை சுக்கு நூறாய் எல்லே வெடிச்சிடும். 

செல்போன் கொம்பனியளிலை சில விசேச நம்பர்களை பெறவேணும் எண்டா கொஞ்சம் காசு கூடக் கட்டியால் கிடைக்கும் எண்டது உங்களுக்கும் தெரியும். கப்ஸ் வாகன நம்பருகள் மாதிரி நினைவிலை நிற்கிற நம்பருகள் அவை. ஆனா அதுக்கு செலவளிக்கிறதிலும் பார்க்க கூட அலையோணும் பாருங்கோ உங்கடை ஆளின்ர நம்பரை எடுக்க. அவவோட கூடத்திரியுறதுகளுக்கு ஏதாவது வாங்கிக் குடுத்து அல்லது அவவின்ர தம்பிக்காரனின்ரை ஒரு சில கோரிக்கைகளை நிறைவேற்றி அல்லது தெரிஞசவன் பறைஞ்சவன்ர காலிலை விழுந்து இப்பிடி செய்யிற லஞ்ச லாவணியங்கள் கொஞ்சமில்லை பாருங்கோ. 

இப்பிடித்தான் என்ர பிரண்ட் ஒருத்தனுக்கு ஒண்டு செற்றாச்சு. இடையிலை என்ன பிரச்சனையோ தெரியாது திடீரெண்டு அவவின்ர பேச்சுவார்த்தை நிண்டு போச்சு. பெடி தவியா தவிச்சிட்டுது. ஆனா என்ன போனிலைதான் எஸ் எம் எஸ் இருக்கே. பெடி அனுப்பிக் கொண்டே இருக்கும். ஒவ்வொரு ரீற் ரீற் எண்ட சத்தமும் டிலிவரி ரிப்போட்டாம்.  ஒரு மெசேஜுக்கு பத்து பதினைந்து டிலிவறி ரிப்போட் வருமோ என்னவோ தெரியாது அவனின்ர போன் ஒரு ஐந்து நிமிசததுக்கை இருவது முப்பது முறை ரீற் ரீற் எண்டு சத்தம் போடும். ஆனா அந்தப் பிளளையோ ஒரு றிப்ளையும் அனுப்பிறதா தெரியேல்லை. உன்ர வயிறு எரியும். என்னத்துக்கு எண்டு கேட்கிறியளே? கணக்கை பாருங்கோவன். என்னதான் ஒரு மெசேஜ் இரண்டு ரூபா எண்டு கொம்பனி சொன்னாலும் இந்த வரி இந்த வரி எண்டு போட்டு அது இரண்டுரூபா அம்பேசமாகத்தான் இருக்கும். உவன் பாவி சராசரியா 20 மெசேஜ் அனுப்பினாலும் ஏறத்தாழ 50 ரூபா. உந்தக் காசுக்கு நாங்கள் மூண்டு வடையும் இரண்டு ரீயுமாவது சாப்பிட்டிருக்கலாம். ( அப்ப வடை 9 ரூபா ரீ 10 ரூபா) குறுக்கால போறவன் அனுப்புற மெசேஜுக்கு ரிப்ளையையும் காணேல்லை. வாசிக்கிறாளோ அல்லாட்டா வந்தவுடனை அழிக்கிறாளோ தெரியாது. உந்தச் சந்தேகத்தை நான் அவனுக்கு சொன்னன். அவன் சொன்னான் அவ கட்டாயமாக வாசிப்பா எண்டு. உவங்களை என்னெண்டு நம்புறது. காதலிக்கிறவன் எல்லாம் பொய்தானே சொல்லுறவன். அந்தப் பெட்டை வேறை ஒரு பதிலும் போடவில்லை யெண்டா என்ன அர்த்தம். மெசேஜ் எல்லாம் நேரை குப்பை கூடையுக் கை போகுது எண்டுதானே.


அவனுக்கும் விளங்கியிட்டுது. நான் சந்தேகப் படுறன் எண்டு.

 ” இப்ப உன்க்கு என்ன வேணும் ? அவ வாசிக்கிறாவோ இல்லையோ எண்டுதானே?”

நானும் கோயில் மாடு மாதிரி தலையை ஆட்டினன்.

அவன் மெசேஜ் அடித்தான்.( இங்கிலிசிலைதான்)  அன்பே உனக்கு ஏதோ காரணத்தாலே என்னைப் பிடிக்கவில்லை எண்டு தெரிகிறது. நீயும் பிடிக்கவில்லை என்பதை தெரிவித்தால் நான் காத்திராமல் மறந்து விட்டு மற்றைய வேலையை பார்ப்பேன். உடன் பதிலிடவும்.

அனுப்பி ஒரு நிமிடம்கூட ஆயிருக்காது ரிப்ளை வந்தது. ”நான் உன்னை வெறுக்கிறேன். மறந்துவிடு என்னை.”

காட்டிப்போட்டு கேட்டான். என்ன இப்பவாவது நம்புறியா?

திறந்த வாய்க்கை இலையான் பூந்தது கூட தெரியாமல் வாயை பிளந்து கொண்டிருந்த நான் என்ன சொல்லுறது. அவன் போய்விட்டான்.

உது நடந்தது 2001 இல. 


கொஞ்சநாள் போக நானும் கஸ்டப் பட்டு ஒரு நம்பரை அவனின்ரை இவனின்ரை காலிலை விழுந்து எடுத்தன். போட்ட ஒரு மெசேஜுக்கும் ரிப்ளை இல்லை. அட அநியாயமே! உந்தக் காசுக்கு வடை வாங்கித் திண்டிருந்தாலும் மிச்சம். என்ன செய்யுறது. 

எழுதினேன். 
நானும் ஒரு கொள்கை(?!!)யோடதான் இருக்கிறன். பிடிக்காட்டா சொல்லும் நான் கரைச்சல் குடுக்கமாட்டன். 

ரிப்ளை வந்தது
நான் எப்பவோ சொல்லியிட்டன். இண்டையிலை இருந்தாவது மரியாதையாக(?!!) மெசேஜ் அனுப்புவதை நிப்பாட்டவும்.

ஹுஹு ஹு

வடைக்காசு வீண்போகவில்லை. 

வாசிச்சிருக்கிறா.

இப்ப வடை 25 ரூபா. மெசேஜ் 1ரூபா 50 சதம்.

கே காலையிலை வடை 15 ரூபா.

1 கருத்து:

lavanyan சொன்னது…

யாரடா அந்த 2001 நண்பன் எனக்குத் தெரியாம...