உலக சுகாதார ஸ்தாபனத்தில் வேலை செய்த காலத்தில் உலக சுகாதார தினம் கொழும்பு இன்ரகொன்டினண்ட் ஓட்டலில் கொண்டாடப்பட்டது. அதில் எடுக்கப்பட்ட படங்கள் தான் இவை!
செவ்வாய், 22 ஜூலை, 2008
உலக சுகாதார தினம் 2006
உலக சுகாதார ஸ்தாபனத்தில் வேலை செய்த காலத்தில் உலக சுகாதார தினம் கொழும்பு இன்ரகொன்டினண்ட் ஓட்டலில் கொண்டாடப்பட்டது. அதில் எடுக்கப்பட்ட படங்கள் தான் இவை!
செவ்வாய், 15 ஜூலை, 2008
மறக்க முடியாத நினைவுகள்
ரை கட்டும் சுரஞ்ச , சூ லேஸ் கட்டும் சுரங்க , பார்த்து சிரிப்பது கவிங்கா .
ஏக்கம் மிகுந்த இனிய நினைவுகள்
சட்டி சுட்டாலும் கை விடாது!
சமையல் செய்வது என்பது ஆண்களுக்கு ஒரு பெரிய விடயமல்ல. வெளி நாடுகளில் இருக்கும் நண்பர்கள் சமைத்து ஒரு கிழமை சாப்பாடை குளிரூட்டியில் வைக்கும் கதை நாமறிந்தது.
ஆனாலும் சமையல் என்பது அலுப்பு பிடிச்ச விடயம் தான்.
சரி நாமும் தான் சமைச்சு பாப்பமே என வெளிக்கிட்ட எனது கதை இது. சட்டி சுட்டாலும் இன்னும் கை விட வில்லை ( சமையலை)
செவ்வாய், 8 ஜூலை, 2008
வெள்ளி, 4 ஜூலை, 2008
கந்தான மலை பயணம்
திங்கள், 30 ஜூன், 2008
கனவு நனவாகும் காலம் !
அறை எண் 78 இல் கடவுள்
ஒரு பிரமச்சாரியின் அறை
அலுப்படிக்குது !
யாழ் இந்து மேலை தேய வாத்திய குழு
மேஜர் தவபாலன் உடன் எமது அணி

அட்சரம் பிசகாத அணி வகுப்பு

leep forward நடவடிக்கைக்கு முதல் நாள் எமது விளை யாட்டுப் போட்டி

இது அந்த நாள் ஞாபகம்

செவ்வாய், 17 ஜூன், 2008
சொன்னா வெட்ககேடு சொல்லாட்டா மானக்கேடு !
ஆனாலும் என்ன கீழே உள்ளவனுக்கு இரத்த வங்கியின் பொறுப்பு கிடைத்தது
இரத்த தானம் செய்யும் கொடையாளர் தினம் வந்த போது சிறிய விழா கொண்டாடப் பட்டது .
ஏதோ என்னால இயண்டது இது என்று செய்த விழாவின் படங்கள் கீழே
ஒன்பது மணிக்கு லேட் ஆக வந்த அதிகாரி !
போஸ்டர் ஒட்டவும் நாங்களே போகவேணும்!
செஞ்சிலுவை சங்க உதவி
என் கூட வேலை செய்பவ !
எல்லாம் நடந்தது 14.06.2008 அன்று !
செவ்வாய், 10 ஜூன், 2008
மருத்துவ பீட சுற்றுலா
கொழும்பு மருத்துவ பீடத்தில் படித்த ( அல்லது படிக்கிற மாதிரி நடித்த ) ஐந்து வருடங்களில் கிடைத்த ஒரு சந்தர்ப்பம் தான் இந்த பேருவளை சுற்றுலா.
பீடத்தில் படிக்கும் அனைத்து மாணவர்களும் ஒரு புகைவண்டி பிடித்து அந்த விசேட வண்டியில் கடற்கரைக்கு போகும் அனுபவம் மறக்க முடியாதது!
இந்த காலத்தை போல் பயணம் என்றால் குண்டின் பயம் இன்றி போன நந்தவன நாட்கள் அவை!
இந்த படங்கள் நண்பன் தினேஷின் பேனை புகைப்பட கருவியால் பிடிக்கப்பட்டவை .

சீனியர் கலை சாப்பாட்டு பொதியுடன்!

திரும் ப போக வண்டி வருமா என் ஏங்கும் புது முக பிரிவு ( அது அப்ப)


தலைவர் என்றால் இப்படித்தான் !
வியாழன், 8 மே, 2008
மலையும் பள்ளத்தாக்கும் !
இரண்டு மலை
இடையில் பள்ளத்தாக்கு
ஒரு மலையில் என் வேலைத் தளம்
மறு மலையில் என் குடியிருப்பு
இரண்டு மலைகளிலும் மேக முந்தானைகள்
பள்ளத்தாக்கின் ஊடாக என் பாதை
இப்படித் தான் எழுதவேண்டி வரும் என் இருப்பிடம் பற்றி சொன்னால்
என்றாலும் இன்னும் இரட்டை அர்த்தத்தில் கவி சொல்வதாக அவள் கோவிக்க கூடும்
படத்தை பாருங்கள் நான் சொன்னது உண்மை என புரியும்
செவ்வாய், 6 மே, 2008
மடுவுக்கு போன மனிதர்கள்

இந்த படத்தைப் பார்த்திட்டு ஏதோ இந்த வெங்காயங்கள் போய் மடுவை பிடிசிடுதுகள் என்று தவறாக எண்ண வேண்டாம் .இது சிவராத்திரிக்கு திருகேதீச்வரம் போகேக்கை மடுவுக்கும் போய் எடுத்த படம் . 2005 ஆம் ஆண்டு எடுத்த படம். கொழும்பு பல்கலை கழக தமிழ் மன்றம் ஏற்பாடு செய்த பயணம் அது !


பயணம் செய்த பஸ் . என்ன பகிடி என்றால் இந்த இரண்டு பஸ் உம் மடு வர முடியவில்லை. பாதை பயண அனுமதி இல்லாததால் இவை இரண்டும் உள்ளே செல்ல படையினரால் அனுமதி மறுக்கப்பட்டது . எனவே மூன்றாவதாக பிடித்த பஸ் இனுள் மூன்று பஸ் சனத்தையும் அடைத்து போன பயணம் மறக்க முடியாதது !
புதன், 30 ஏப்ரல், 2008
சைக்கிள் ஓட பழகிய கதை
எனக்கு ஆண்டு ஆறு படிக்கும் வரை சைக்கிள் ஓட தெரியாது என்பது அவமானத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று. அந்த வயதில் குஞ்சு குருமான் எல்லாம் பெரிய சைக்கிளை கூட பாருக்கால் கால் விட்டு ஒடக்கூடியதாக இருக்கையில் எனக்கு அரை சைக்கிள் வாங்கி தந்தும் ஒடதெரியாதது அவமானம் தானே? என்றாலும் பக்கத்து கோயிலில் சூடு விழுந்தான் பிள்ளையார் கோவிலில் பின் சீட்டை அப்பா பிடிக்க , தத்தி தத்தி சைக்கில் ஓட பழகியதை இன்றும் மறக்க முடியாது.
இது இப்படி இருக்க , ஒரு நாள் சைக்கிளில் தனியா போகும்போது சந்தியை கடக்கவேண்டி வந்தது . சைக்கிளை மிதிக்கவும் பிரேக் பிடிக்கவும் மட்டும் தெரிந்த எனக்கு போக்கு வரத்து விதிகள் எதுவும் தெரியாது. சந்தியை கடக்கும் போது முன்னாலே பிரதான வீதியில் ஒரு வயதான மருத்துவ மாது வந்துகொண்டிருந்தா . என்ன செய்வது என்று தெரியாததால் கண்களை இறுக்கி மூடிக்கொண்டேன் . டமால் என்று சத்தம் மட்டும் கேட்டது . நாங்கள் இருவரும் தெருவில் விழுந்து இருந்தோம். பிழை முழுதும் என் பக்கம் தான் என்றாலும் எனக்கு ஒன்று பேசாமல் என்னை தூக்கிவிட்டு தம்பிக்கு காயமா என கேட்ட அந்த அம்மாவை மறக்க முடியாது .
அதுசரி இங்கே கொழும்பிலே இன்னும் சைக்கில் பலன்சு பண்ணி ஓட தெரியாம இருந்த என் நண்பனை பார்க்கும் போது எனக்கு சந்தோசம். என்னை விட கீழேயும் ஒருவன் இருக்கிறான் !
சனி, 19 ஏப்ரல், 2008
வாயுபுத்திரன் என்ற பெயரின் பின்னணி
வெள்ளி, 4 ஏப்ரல், 2008
என்ன இருக்கு உள்ளே ?
எனக்கு தெரியும்
தலைப்பை பார்த்த உடனே உள்ளுக்கை பூந்து பார்க்கிற வழக்கம் என்னை போலவே உங்களுக்கும் இருக்கும் என்று. கொஞ்சம் பொறுங்கோ .
எல்லாம் வெளியில வரும்!